அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Tuesday 21 August 2012

குர்ஆனின் அத்தாட்சிகள்

குர்ஆனின் அத்தாட்சிகள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித சமுதாயத்தை நேரான பாதையில் கொண்டுசெல்ல அல்லாஹ்விடம் இருந்து வேதங்கள் திருதூதர்கள் வழியாக அளிக்கப்பட்டு கொண்டு இருந்தன. ஏழாவது நூற்றான்டில் வேதங்களின் இறுதியாக இறுதி நாள் வரை உள்ள மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன் ஆகும்.

அறிவியல் முன்னேற்றத்தால் மனிதனின் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், திருக்குர்ஆனின் எந்தவொரு கருத்தும் தவறானது என்று இதுவரை எவராலும் நிருபிக்க முடியவில்லை.

அதைப்போல் குர்ஆனில் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் நூறு சதவீதம் உண்மையானது என்பதை இப்பூமியில் பயணம் சென்றால் நம்மால் உணர முடியும். பூமியில் பயணம் செய்து கடந்த கால வரலாற்றை படித்து படிப்பினை பெற திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

பூமியில் பிராயாணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு என்னவாயிற்று என்று பாருங்கள்” என்று (அவர்களிடம் நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 27:69

ஆதம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலாம் வரை உள்ள வரலாற்று நிகழ்ச்சிகள் இங்கு தொகுக்கப் பட்டுள்ளன.
ஆதம் அலைஹி வஸ்ஸலாம்
மக்காவிலிருந்து சிறிது தூரத்திலுள்ள அராஃபாவிலே ஜபலூர்ரஹ்மத் என்ற இந்த மலையில்தான் (படம் 1a ) ஆதம் அலைஹிவஸ்ஸலாமும் ஹவ்வா அலைஹிமுஸ்ஸலாமும் இவ்வுலகில் முதன் முறையாக சந்த்தித்து கொண்டார்கள் என்பது கருத்தாகும்.
Prophet Adam and Hawwa first meeting place.
படம் 1a
நூஹ் அலைஹி வஸ்ஸலாம் 
இறைத்தூதர் நூஹ் நபி அவர்கள் வாழ்ந்த இடங்கள் இப்போது இராக்கில் உள்ளன. சிலைகளை வணங்கிக்கொண்டிருந்த சுமேரிய மக்களை உண்மையான நம்பிக்கையின் பக்கம் அழைத்தனர். நீண்ட நாட்கள் அழைப்பு பணி செய்தும் ஒரு சிலர்தான் அவருடைய பிராச்சாரத்தை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்சிகளை திருக்குர்ஆனில் கீழ்கண்டவாறு கூறப்பட்டுள்ளது

மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.

“நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.”

அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
“அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.

இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.

அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.

பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது. அல்குர்ஆன் 11:36 - 44 
இராக்கில் ஹூபாவில் உள்ள இந்த இடத்தில்(படம் 2b) வைத்துதான் அந்த கப்பல் கட்டப்பட்டது என்பது பலமான கருத்தாகும்.


Idols of people of sumeria
சுமேரிய மக்கள் வணங்கிக் கொண்டிருந்த சிலைகள்.
படம் 2a
Hooba Mosque
வரலாற்று சிறப்புமிக்க ஹூபா பள்ளிவாசல்.
படம் 2b
நூஹ் நபியின் கப்பல் சென்று தங்கிய மலைப்பகுதி துருக்கி நாட்டில் குர்திஸ்தான் என்ற நகரத்தின் வடக்கு பகுதியிலிருந்து பார்க்கும் போது ஆறாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் இருக்கிறது.



ஆது சமுதாயத்தினரும் ஹூது நபியும்
ஹூது நபியின் கூட்டத்தார்களான ஆது சமுதயாத்தினர் வாழ்ந்திருந்த இடம்தான் உபார் ஆகும். இது ஓமான் நாட்டில் உள்ள சலாலாஹ் என்ற நகரத்திலிருந்து 172 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இது கி.பி. 1992ல் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபடிக்கப்பட்டது.


The lost city of UbarThe lost city of Ubar
மணல் குன்றுகளை தோண்டியபொழுது கிடைத்த சிதிலங்கள்
திருக்குர்ஆன் அத்தியாயம் 11:50 ல் அல்லாஹ் கூறுகிறான்.
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.


Well of Ad PeopleWell of Ad people
ஆது சமுதாயத்தினர் பயன்படுத்திய கிணறு. இக்கிணற்றில் இப்பொழுதும் தண்ணீர் இருக்கிறது.
மேலும் திருக்குர்ஆன் வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான்
உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (அவர்கள்) தூண்களையுடைய “இரம்” (நகர) வாசிகள், அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை. அல்குர்ஆன் 89:6-8


thigs used by Ad people
இது மேற்கூறப்பட்ட தூண்களின் சிதிலமடைந்த பகுதி ஆகும்.
Things used by Ad people
ஆது கூட்டத்தினர் பயன்படுத்திய பொருட்கள்
Things used by Ad people
ஆது கூட்டத்தினர் பயன்படுத்திய பொருட்கள்
சிலைகளை வணங்கி கொண்டிருந்த ஆது சமுதாயத்தினரிடம் அல்லாஹ் வழங்கும் தண்டனைகளைப் பற்றி ஹூது நபி முன்னெச்சரிக்கை செய்தார். ஆனால் அவர்களோ அதையும் மறுத்து புறக்கணித்தனர். ஹூது நபியையும் உண்மையான விசுவாசிகளையும் பாதுகாத்து அல்லாஹ் நிராகரிப்போரை அழித்தான்.

இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர். அல்குர்ஆன் 69:6-7


இப்பொழுது உபாரை சுற்றிலும் யாருமற்ற பாலைவனம் தான் உள்ளது. 
ஸாலிஹ் அலைஹி வஸ்ஸலாம்
சுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஸாலிஹ் நபி.

சவுதி அரேபியாவில் உள்ள மதாயன ஷாலிஹ் என்ற இடத்தில் பெரும்பாறைகளை குடைந்து அவர்கள் வாழ்ந்த குகை வீடுகள் இப்போதும் உள்ளன. மதீனாவிலிருந்து 405 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு திசையில் மதாயன ஷாலிஹ் உள்ளது.


cave house of Samud people
cave house of Samud people
cave house of Samud people
ஸமூது (கூட்டத்தினர்) வாழ்ந்த குகை வீடுகள்
இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.” அல்குர்அன் 11:61

(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.

அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். அல்குர்ஆன் 15:80-82

பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்(து வசித்து வந்)த ஸமூது கூட்டத்தையும் (என்ன செய்தான் என்று பார்க்கவில்லையா?) அல்குர்ஆன் 89:9


well of Samud people
அவர்களுடைய பொது கிணறு
Auditorium Samud people
பொது நிகழ்ச்சிகளுக்கு ஸமூது கூட்டத்தினர் பயன்படுத்திய அரங்கம்
things used by Samud peoplethings used by Samud people
அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் அல்உலா அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
ஸமூது கூட்டத்தினர் ஒன்பது வன்முறை கூட்டத்தினர்களாக இருந்து பல தெய்வ வணக்கம் செய்தல், கொள்ளை அடித்தல், அக்கிரம செயல்கள் புரிதல் போன்றவைகளில் பரவலாக ஈடுபட்டனர். அப்பொழுது அல்லாஹ் அதிசயமான உருவத்துடன் ஒரு ஒட்டகத்தை படைத்து அவர்களிடையே நடக்க செய்தான். அவ்வொட்டகத்தை எந்த ஒரு துன்பமும் செய்யாமலிருக்க கட்டளையிட்டான்.


It is believed to be the place where Allah's Camel drank the water
அல்லாஹ் அனுப்பிய ஒட்டகம் தண்ணீர் குடித்த இடம் என்று நம்பப்படுகிறது.
அவர்கள் இறையானைக்கு சவால் விட்டு அந்த ஒட்டகத்தை அறுத்து விட்டார்கள். அதிகாலை நேரத்தில் அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கியது.
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர். அல்குர்ஆன் 11:64-67
இப்ராஹீம் அலைஹி வஸ்ஸலாம்
இராக்கில் உள்ள அன்நஸிரியா நகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பாபிலோனியாவில் உள்ள உர் என்று அழைக்கப்படுகின்ற நகரம் தான் இபுறாகிம் நபி பிறந்த நகரமாகும்.


It is believed to be the house of Prophet Ibrahim
இப்ராஹீம் நபி அவர்களின் வீடு என்று நம்பப்படுகிறது.
Moon temple build by King Namrud
நம்புருது மன்னன் சந்திரனுக்கு கட்டிய கோயில்.
இப்ராஹீம் நபியின் சமுகத்தினர் அவ்வூரை சந்திர தேவன் காத்து வருவதாக நம்பினர். அவ்வூரில் சந்திரனுக்கு ஒரு கோயில் கட்டினான் நம்புருது மன்னன்.

பிற்காலத்தில் அக்கோயிலை மக்கள் புதுபித்தார்கள். சுமார் ஜயாயிரம் தேவர்களையும் தேவிகளையும் சிலை வடிவில் வணங்கிக் கொண்டிருந்த தன் சமுதாயத்தினர், தம் தந்தை மற்றும் நம்ருது மன்னனிடமும் சிலை வணக்கத்தின் பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத நிலைகளை எடுத்து கூறினார். 


The basement of King Namrud palace
நம்ருது மன்னனின் அரண்மனையின் அஸ்திவாரம்
சுமார் 38 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமும் உள்ள நம்ருது மன்னனின் அரண்மனையில் ஏறக்குறைய 30 அறைகள் இருந்தன.

சிலைகள் உயிரற்றவை என்பதை நிரூபிப்பதற்க்கு இப்ராஹீம் நபி ஒரு தந்திரம் செய்தார்கள். சிறிய சிலைகள் எல்லாவற்றையும் கோடாரியால் உடைத்துவிட்டு கோடாரியை பெரிய சிலையின் கழுத்தில் தொங்கவிட்டார். இதனால் கோபமுற்ற அவரது சமுதாயத்தினர் அவரை நெருப்பில் தள்ளி கொலை செய்ய முடிவெடுத்தனர். அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்ற உண்மையை கூறிய இப்ராஹீம் நெருப்பு குண்டத்தில் தூக்கியெறியப்பட்டார். ஆனால் எல்லாவற்றையும் எரிக்கும் நெருப்புக்கு அந்த ஆற்றல் இல்லாமல் போகும்படி அல்லாஹ் ஆனையிட்டான்.

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம். அல்குர்ஆன் 21:69 

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் நாட்டையும் வீட்டையும் விட்டு ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாலஸ்தீனத்தை அடைந்தார்.



இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் அடக்கஸ்தலம் ஹெப்ரான் நகரத்தில் உள்ள அல்ஹலீல் என்ற இந்த பள்ளிவாசல் அருகில்தான் உள்ளது.
இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் முதுமை காலத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறக்கிறார். அந்த மகனையும் மனைவி ஹாஜராவையும் பாலஸ்தீனத்தில் இருந்து ஏறத்தாழ 1500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரேபியாவில் ஆள் நடமாட்டமில்லாத மக்காவில் விட்டுவிட்டு திரும்பி வரும்படி அல்லாஹ் கட்டளையிட்டான். வறட்சிமிக்க அரேபியாவின் பள்ளத்தாக்குகளில் அதிர்ச்சியோடு சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் தண்ணீரைத்தேடி இங்கும் அங்கும் ஹாஜரா அழைந்தார். இந்த வரலாற்று உணர்வை நிலை நாட்ட இன்றும் ஹஜ் மற்றும் உம்ரா செய்பவர்கள் சஃபா மர்வா குன்றுகளுக்கிடையில் வேகமாக நடந்து வருவார்கள். வறட்சிமிக்க மக்காவில் விடப்பட்ட கைக் குழந்தை தாகத்தால் கால்களை உதைத்து அழுதபோது அவ்விடத்தில் ஜம்ஜம் என்ற நீருற்று பீறிட்டு கிளம்பியது. இந்த நீருற்று நாலாயிரம் வருடங்களுக்கு பிறகும் வற்றாமல் மக்காவாசிகளுக்கும் மக்காவுக்குவரும் ஹாஜிகளுக்கு ஏற்படுத்திய பெரும் அருட்கொடையாகும்.

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலைவனத்தில் விட்டு சென்ற கைக்குழந்தை வளர்ந்து நடக்கும் பருவத்தை அடைந்ததும் அவர்களது கைகளால் அக்குழந்தையை அறுத்து பலியிடுமாறு இறைவன் கட்டளையிட்டான். இதனை நிறைவேற்றுவதற்க்கு இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பாலஸ்தீனத்திலிருந்து மீண்டும் மக்கா வந்தார். மகனுடன் மினாவிற்க்கு புறப்பட்ட இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் இந்த இடத்திற்க்கு(படம் 5e) வந்து சேர்ந்து வந்தவுடன் ஷைத்தான் அசரிரியாக இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களை திசைதிருப்ப முயற்சி செய்தான். அந்த அசரிரியின் ஒசை கேட்ட திசை நோக்கி இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் கல்லால் அடித்தார்கள். எம்பெருமானர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் கட்டளைக்கு இணங்க செய்யக்கூடிய ஹஜ்ஜில் அதே இடத்தில் ஹாஜிகள் கல்லால் அடிப்பார்கள். ஷைத்தான் அடிக்கும் கற்கள் இந்த வட்டத்திற்க்குள் விழுந்தால் போதுமானது. அந்த தூணில் படவேண்டிய அவசியமில்லை



படம் 5e
இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் மகனை அறுப்பதற்க்காக தரையில் படுக்க வைக்கிறார்கள் அப்பொழுது இறைவன் கூறினான்: வேண்டாம் இப்றாஹீம் நீ என் கட்டளையை நிறைவேற்றிவிட்டாய். உம்மகனுக்கு பதிலாக ஒரு ஆட்டை அறுப்பாயாக. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்க்காக எதையும் தியாகம் செய்யக்கூடிய மனப்பான்மையை உருவாக்குதுதான் இந்த திருப்பலியின் நோக்கமாகும்

இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன் இஸ்மாயில் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் வாலிப வயதை அடைந்ததும் அவர்கள் இருவருக்கும் கஃபாவை அதன் பழமையான அஸ்திவாரத்திலிருந்து எழுப்பும்படி அல்லாஹ் கட்டளையிட்டான்.
Kaaba
இந்த இறையில்லத்தை 7 முறை இடப்புறமாக சுற்றி வலம்வருவது ஹஜ்ஜிலும் உம்ராவிலும் கடமையான செயலாகும்.
லூத் அலைஹி வஸ்ஸலாம்
இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் சகோதரனின் மகன் லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கனை பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான். அதில் சதோம் என்பது முக்கியமான நகரமாகும். ஓரின புனர்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த தன் சமுதாயத்தினரிடம் அந்த மானக்கேடான செயலை விட்டுவிடுமாறு லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அச்சமுகத்தினர் அத்தீயசெயலை மிகவும் பகிரங்கமாக செய்து வந்தனர். இதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள்
இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.

“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.

இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.

நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கோண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.

(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம். அல்குர்ஆன் 29:30-35


அதனால் உருவாகியதுதான் இந்த சாவுக்கடல் அல்லது லூத்தின் கடல். ஜோர்டான் நாட்டுத் தலைநகரம் அம்மானிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தான் சாவுக்கடல் உள்ளது.


Dead SeaDead Sea
இக்கடலில் உள்ள உப்பின் அளவு சாதரணமாக உள்ள கடலின் உப்பின் அளவைவிட 8 மடங்கு அதிகமாகும். ஆகையால் இந்நீரில் விழும் எல்லாப் பொருள்களும் மிதப்பதை காணலாம். உயிரினம் உயிர்வாழமுடியாத காரணத்தினால் இக்கடல் சாக்கடல் என்றழைக்கப்படுகிறது. இவ்வுலகில் ஓரின புணர்ச்சியில் ஈடுபடக்கூடிய எல்லா காலங்களிலும் உள்ள எல்லோருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இக்கடலை அல்லாஹ் ஏற்ப்படுத்தியுள்ளான்.
யூஸுஃப் அலைஹி வஸ்ஸலாம் 
யாகூப் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன்தான் யூஸுப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள். அவர்கள் எகிப்தில் ஆட்சிசெய்தார்கள். அக்காலத்தில் ஆயிரம் நாட்கள் வேலை செய்து நைல்நதிக்கு ஒரு கிளை நதி ஏற்படுத்தினார்கள். அதற்க்கு யூஸுஃபின் நதி என்று பெயர். யூஸுஃப் நதி ஓடிக் கொண்டிருக்கும் பகுதியை அல்பயும் என்றழைக்கிறார்கள். இந்நதியினால் அப்பகுதி முழுவதும் செழிப்பாக உள்ளது. இது எகிப்தின் தலைநகரம் கெய்ரோவிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 


Prophet Yusuf river
ஷுஐப் அலைஹி வஸ்ஸலாம்
ஜோர்டான் தலைநகரம் அம்மானிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் மத்யன் பகுதி உள்ளது.

மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார். அல்குர்ஆன் 7:85

(தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.

அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்! அல்குர்ஆன் 11:94-95
Madyan
மனித நடமாட்டமில்லாத மத்யன் பகுதி.
மூஸா அலைஹி வஸ்ஸலாம்
மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் சுமார் 3200 வருடங்களுக்கு முன் எகிப்தில் பிறந்தார்கள். ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன் இஸ்ராயில் என்ற வம்சத்தில் பிறக்கின்ற எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்ய உத்திரவிட்ட காலத்தில்தான் அவர் பிறந்தார். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் பிறந்தவுடன் அவரைப் பெட்டியில் வைத்து நைல்நதியில் விட்டுவிடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். நைல்நதியில் மிதந்து வந்த பெட்டியில் உள்ள குழந்தையை ஃபிர்அவ்னின் மனைவி ஆசியா கண்டெடுத்து ஃபிர்அவ்னின் அரண்மனைக்கு கொண்டு சென்றார். அக்குழந்தை இஸ்ராயில் வம்சத்தை சார்ந்ததினால் அக்குழந்தையை கொலை செய்ய முயற்சி செய்தான். ஆனால் தன் மனைவி ஆசியாவின் நிர்பந்தத்திற்க்கு இணங்கி அக்குழந்தையை கொல்லாமல் விட்டுவிட்டான். அக்குழந்தைக்கு பால் கொடுப்பதற்க்காக செவிலித்தாய் என்ற முறையில் ஃபிர்அவ்னுக்கு தெரியாமல் அதன் சொந்த தாயிடம் ஒப்படைத்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் ஃபிர்அவ்னின் அரண்மனையிலே வளர்ந்து வாலிபம் அடைந்தார். ஓரு அக்கிரமக்காரனின் கொடுமையிலிருந்து அப்பாவியான இஸ்ரவேலரை காப்பதற்க்காக மூஸா அவனை தாக்கிய போது அவன் இறந்து விடுகிறான். அவனை கொலை செய்வது மூஸாவின் நோக்கமல்ல. ஆனால் கொலைப் பழி அவர்மீது சாட்டப்பட்டதால் ஃபிர்அவ்னின் ஆட்கள் அவரை தேட ஆரம்பித்தனர். இதை அறிந்ததும் அவர் அந்த இடத்தைவிட்டு தப்பி சென்றுவிட்டார். சினாய் மலைப்பகுதிகளையும், பாலைவனங்களையும் கடந்து பல மைல் தூரம் தனித்து நடந்து மதியன் இடத்தை அடைந்தார்.

இன்னும், அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்தபோது, அவ்விடத்தில் ஒரு கூட்டத்தினர் (தம் கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர, பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் தண்ணீர் புகட்டாது) ஒதுங்கி நின்றதைக் கண்டார்; “உங்களிருவரின் விஷயம் என்ன?” என்று (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்; அதற்கு: “இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக் விட்டு) விலகும் வரை நாங்கள் எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எங்கள் தந்தை மிகவும் வயது முதிர்ந்தவர்” என்று அவ்விருவரும் கூறினார்கள்.

ஆகையால், அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்; பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி: “என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினார். அல்குர்ஆன் 28:23-24 


the place where the damsels watering their flocks
ஆடுகளுக்கு தண்ணீர் புகட்டிய இடம்.
the shade where the Prophet Moosa took rest.
மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஓய்வெடுத்த இடம்.
இங்கு ஓய்வெடுக்கும் போதுதான் அப்பெண்களில் ஒரு பெண் சிறிது வெட்க்கத்துடன் வந்து எங்கள் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்து உதவியதற்க்கு கூலி கொடுக்க எங்கள் தந்தை அழைக்கிறார் என்று கூறினார். அந்த தந்தை ஸுஐப் அலைஹி வஸ்ஸலாம் ஆவார்கள். ஸுஐப் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் தன் மகள்களில் ஒருவரை பத்து ஆண்டுகள் ஆடு மேய்த்து திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின்படி திருமணம் செய்து கொடுத்தார்கள். அதற்க்குபின் பத்து ஆண்டுகள் மத்யனில் வாழ்ந்த பிறகு மனைவியை அழைத்துக் கொண்டு மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இப்பொழுது எகிப்த்தை சார்ந்த தெற்க்கு சினாயில் உள்ள துவா பள்ளத்தாக்கிற்க்கு வந்து சேர்ந்தார்.


The valley of Thua
துவா பள்ளத்தாக்கு
இரவில் அந்த இருளில் அல்லாஹ் அவரிடம் நேரில் பேசினான். அதற்க்கு பிறகு நேர்ந்த சம்பவங்களை குர்ஆனில் அல்லாஹ் விவரிக்கிறான்.

“நிச்சயமாக நாம் தான் உம்முடைய இறைவன்; நீர் உம் காலணிகள் இரண்டையும் கழற்றிவிடும்! நிச்சயமாக நீர் “துவா” என்னும் புனிதமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்.

இன்னும் “நாம் உம்மை (என் தூதராக)த் தேர்ந்தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப் படுவதற்கு நீர் செவியேற்பீராக.

“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன் 20:12-14
Holy Catherine Church
துவா பள்ளத்தாக்கில் கி.பி.330ல் கான்ஸ்டன்டைன் என்ற கிருத்துவ அரசன் நிர்மானித்து கி.பி.530ல் ஜஸ்டினிய மன்னரின் உத்தரவின்பேரில் விரிவு செய்யப்பட்ட புனித கேதரின் என்ற கிருத்துவ மடம்தான் இது.
மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் நீண்டதொரு உரையாடலை நிகழ்த்தியது ஒரு மரத்திற்க்கு அருகிலிருந்துதான்.

அவர் நெருப்பின் அருகே வந்த போது, (அங்குள்ள) பாக்கியம் பெற்ற அப் பள்ளத்தாக்கிலுள்ள ஓடையின் வலப்பக்கத்தில் (ஒரு) மரத்திலிருந்து: “மூஸாவே! நிச்சயமாக நானே அகிலத்தாருக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்!” என்று கூப்பிடப்பட்டார். அல்குர்ஆன் 28:30 

அல்லாஹ்வின் பேரொளி எழுந்த இடத்தில் இருந்த அந்த மரத்தின் தொடர்ச்சியாக ஒரு மரத்தை இப்பொழுதும் காணலாம். நெருப்பின் ஜுவாலைகள் வெளிப்பட்டதால் இந்த மரம் பர்னிங் புஸ்(Burning Bush) என்று பெயர் பெற்றது (படம் 8a
Burning Bush
படம் 8a
மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஃபிர்அவ்ன் 
பரோவா மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள் கெய்ரோவில் உள்ள எகிப்திய அருங்காட்ச்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 


Jewelry of Pharoah Kings
நகைகள்
Gold Bed
தங்கத்திலான கட்டில்
Coins
நாணயங்கள்
Golden coffin
உடல்கள் வைக்கப்பட்டிருந்த கூடுகள்.
Tutankhamun Gold Mask
டூடுட் அங்க் அமான் என்ற பரோவா மன்னனின் முகமூடி
மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களை தன் சகோதரர் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களையும் அழைத்துக் கொண்டு ஃபிர்அவ்னை சந்திக்க செல்லும்படி அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்கள் நாங்கள் உலக இரட்சகனான அல்லாஹ்வின் திருத்தூதர்கள் அதனால் அல்லாஹ்வை நீ ஏற்றுக்கொள், இஸ்ராயீலின் சந்ததியினரை எங்களுடன் அனுப்பிவை என்றும் நானே இறைவன் என்று சொல்லிக்கொண்டிருந்த ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்.

ஃபிர்அவ்னின் கொடுமையிலிருந்து இஸ்ராயீலர்களை காப்பற்ற மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் முடிவு செய்தார்கள். மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் அவர்களும் இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான இஸ்ராயீலர்களை ரகசியமாக எகிப்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இதனை அறிந்த ஃபிர்அவ்ன் ஒரு பெரும்படையுடன் அவர்களை பிடிக்க புறப்பட்டான். செங்கடலின் வடக்கு எல்லையில் உள்ள சூயஸ் வளைகுடாவின் வடக்கு எல்லைக்கு இரண்டு கூட்டத்தாரும் சென்று சேர்ந்தனர் என்று வரலாறு கூறுகிறது. இந்த தருணத்தில் அல்லாஹ் அவர்களுக்கு கட்டளையிட்டான்.

“உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது. அல்குர்ஆன் 26:63 

தண்ணீர் இல்லாமல் வறண்டு போன பாதை கால்வாயின் நடுவில் தோன்றியது. அப்பாதையில் இஸ்ராயீலர்கள் மறுகரையில் உள்ள சினாய் பகுதிக்கு தப்பிச் சென்றனர். ஃபிர்அவ்னும் அவனது படையினரும் கடலின் நடுவில் தோன்றிய பாதையில் நுழைந்து இஸ்ராயீலர்களை பிடிப்பதற்க்கு ஓடிச்சென்றனர். ஆனால் அவர்கள் பாதையின் நடுவே சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையை அல்லாஹ் மீண்டும் கடலாக மாற்றினான். ஃபிர்;அவ்னும் அவனது படையினரும் தண்ணீரில் முழ்கி இறந்தனர். ஃபிர்அவ்னுடைய பிரேதத்தை ஒரு அத்தாட்சியாக்கி நிலைநிறுத்துவதாக அல்லாஹ் கூறுகிறான்.

மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது, ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:90-92

அல்குர்ஆனில் கூறப்பட்டது உண்மையாகிவிட்டது. 1898ம் ஆண்டில் கண்டெடுக்கப்பட்ட ஃபிர்அவ்னின் இந்த உடல் எகிப்து அருங்காட்சியகத்தில் ராயல் மம்மி ஹாலில் ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வுடல் 202 சென்டிமீட்டர் நீளமுள்ளது. கி.மு. 1235ல் தண்ணீரில் முழ்கடிக்கப்பட்டு இறந்துபோன ஃபிர்அவ்னின் உடல் பல ஆண்டுகளுக்கு மேலாகியும் கெட்டுப்போகமல் அல்லாஹ் கூறியது போல பாதுகாக்கப்பட்டிருப்பது அல்குர்ஆன் ஒரு இறைவேதம் என்பதற்க்கு மாபெரும் சான்றாகும்.


FirounFiroun
ஃபிர்அவ்ன்
இதே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஏனைய பரோவா மன்னர்களின் உடல்கள் குடல்கள் எடுக்கப்பட்டு மருந்தால் நனைக்கப்பட்டு, துணிகளால் சுற்றப்பட்டு பாதுகாக்கப்பட்ட மம்மிகளாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட இரண்டாவது ராம்ஸஸ் என்றழைக்கப்படும் ஃபிர்அவ்னின் உடல் மம்மி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிர்அவ்னின் பிடியில் இருந்து தப்பித்த இஸ்ராயீலர்கள் மூஸா அலைஹி வஸ்ஸலாம் மற்றும் ஹாரூன் அலைஹி வஸ்ஸலாம் ஆகியோருடன் சினாயில் தங்கியிருந்த இடத்திற்க்கு பெயர் உயூன் மூஸா என்பதாகும். உயூன் மூஸா என்ற அரபி சொல்லுக்கு மூஸாவின் ஊற்றுக்கள் என்று பெயர்.

இஸ்ராயீலர்கள் 12 கோத்திரங்களாக இருந்தனர். அவர் தண்ணீர் பிடித்துக்கொள்வதற்கு தனித்தனி இடங்கள் இருந்தன. அதில் ஒன்றுதான் இந்த கிணறு. 


யாருமற்ற சினாயில் இஸ்ராயீலர்கள் பயன்படுத்திய மற்றொரு ஊற்றுதான் இது. ஊற்றின் இடத்தில் சமீப காலத்தில் சிறிய இருவழிக்குழாய் பொருத்தபட்டிருக்கிறது.
தெற்க்கு சினாய்க்கு சென்ற இஸ்ராயீலர்களை அழைத்து மீண்டும் துவா பள்ளத்தாக்கிற்க்கு அருகிலிலுள்ள வாதியராஹ் என்ற இடத்தில் தங்கவைத்தார்கள். அந்த காலத்தில் இஸ்ராயீலர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டபோது அவர்கள் மூஸா அலைஹிவஸ்ஸலாம் அவர்களிடம் முறையிட்டனர். அதற்க்குபிறகு நடைபெற்ற நிகழ்ச்சியை குர்ஆன் விவரிக்கிறது.

மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: “உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!” என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து: “நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்” (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள். 7:160


Rock where the Prophet Moosa struckRock where the Prophet Moosa struck
வாதிஅர்பையின் என்று அறியப்படும் இந்த பள்ளத்தாக்கில் இந்த கல்லில்தான் மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் அடித்தார்கள். அந்த ஊற்றுக்களில் நீர் வடிந்த அடையாளங்கள் இன்றும் உள்ளன.
காரூன்
மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் இஸ்ராயீல் சந்ததியினரில் ஒரு மாபெரும் செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனைப்பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: “நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்” என்று கூறினார்கள்.

“மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்றும் கூறினார்கள்).

(அதற்கு அவன்) கூறினான்: “எனக்குள்ள அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!”. இவனுக்கு முன் இவனை விட மிக்க வலிமையுடையவர்களும், இவனை விட அதிகப் பொருள் சேகரித்து வைத்திருந்தவர்களுமான (எத்தனையோ) தலைமுறையினர்களை அல்லாஹ் அழித்திருக்கின்றான் என்பதை இவன் அறியவில்லையா? ஆனால் குற்றவாளிகள் அவர்கள் செய்த பாவங்கள் பற்றி (உடனுக்குடன்) கேள்வி கணக்குக் கேட்கப்பட மாட்டார்கள்.

அப்பால், அவன் (கர்வத்துடனும், உலக) அலங்காரத்துடன் தன் சமூகத்தாரிடையே சென்றான்; (அப்போது) இவ்வுலக வாழ்க்கையை எவர் விரும்புகிறார்களோ அவர்கள்: “ஆ! காரூனுக்கு கொடுக்கப்பட்டதைப் போன்று நமக்கும் இருக்கக்கூடாதா? நிச்சயமாக, அவன் மகத்தான பாக்கியமுடையவன்” என்று கூறினார்கள்.

கல்வி ஞானம் பெற்றவர்களே “உங்களுக்கென்ன கேடு! ஈமான் கொண்டு, நல்ல அமல்களை செய்பவர்களுக்கு அல்லாஹ் அளிக்கும் வெகுமதி இதைவிட மேன்மையானது; எனினும், அதைப் பொறுமையாளரைத் தவிர, (வேறு) எவரும் அடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள்.

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம்; அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை; இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை.

முன் தினம் அவனுடைய (செல்வ) நிலையை விரும்பியவர்களெல்லாம், “ஆச்சரியம் தான்! அல்லாஹ் தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு ஆகார வசதிகளைப் பெருக்குகிறான், சுருக்கியும் விடுகிறான்; அல்லாஹ் நமக்கு கிருபை செய்யவில்லையாயின் அவன் நம்மையும் (பூமியில்) அழுந்தச் செய்திருப்பான்; ஆச்சரியம் தான்! நிச்சயமாக காஃபிர்கள் சித்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்கள். அல்குர்ஆன் 28:76-82


கெய்ரோவிலிருந்து 150 கிலோமீட்டர் தென்மேற்க்கில் கஸர காரூன் என்ற இடத்தில் தான் அவனுடைய ஆலயம் உள்ளது.


Qarun Temple
காரூனின் ஆலயம்

காரூனின் கிணறு
Qaroon Lake
காரூனின் ஏரி என இப்பொழுதும் அழைக்கபடுகின்ற ஏரி.
The place where earth swallowed up Qaroon and his relatives
காரூனும் அவனுடைய சுற்றத்தார்களும் புதைந்துபோன இடம்.
பல்கீஸ் ராணி 
பாலஸ்தீனத்தில் வாழ்ந்த தாவுத் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் மகன் ஸுலைமான் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் ஆவார்கள். தந்தைக்குப் பிறகு அரசனாக ஆட்சி பொறுப்பேற்றார். அவருக்கு அல்லாஹ் பல அற்புத ஆற்றல்களை வழங்கி இருந்தான். பறவைகளுடன் பேசும் திறமை அவற்றில் ஒன்று. ஏமன் நாட்டை சேர்ந்த மஆரிப் என்ற ஊருக்கு அருகில் சபவு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ராணியான துப்பவு பரம்பரையில் வந்த பல்கீஸ் ராணியின் தலைமையில் சூரியனை வணங்கி வந்தனர். இதை நேரடியாக பார்த்த ஒரு மரங்கொத்தி பறவை ஸுலைமான் அலைஹி வஸ்ஸலாம் அவர்களிடம் வந்து சொன்னது.


Sun Temple
சூரிய கோயிலின் சிதைந்த பகுதி
Queen Balkis Palace
அரண்மனையின் சிதைந்து போன அஸ்திவாரத்தின் பகுதி
அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து: “நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார்.

“நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார்.

(இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார்; அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று: “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். “ஸபா”விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.”

“நிச்சயமாக அ(த் தேசத்த)வர்களை ஒரு பெண் ஆட்சி புரிவதை நான் கண்டேன்; இன்னும், அவளுக்கு (தேவையான) ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது; மகத்தான ஓர் அரியாசனமும் அவளுக்கு இருக்கிறது.

“அவளும், அவளுடைய சமூகத்தார்களும் அல்லாஹ்வையன்றி, சூரியனுக்கு ஸுஜூது செய்வதை நான் கண்டேன்; அவர்களுடைய (இத்தவறான) செயல்களை அவர்களுக்கு ஷைத்தான் அழகாகக் காண்பித்து, அவர்களை நேரான வழியிலிருந்து தடுத்துள்ளான்; ஆகவே அவர்கள் நேர்வழி பெறவில்லை.

“வானங்களிலும், பூமியிலும், மறைந்திருப்பவற்றை வெளியாக்குகிறவனும்; இன்னும் நீங்கள் மறைப்பதையும், நீங்கள் வெளியாக்குவதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வுக்கு அவர்கள் ஸுஜூது செய்து வணங்க வேண்டாமா?

“அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்” (என்று ஹுது ஹுது கூறிற்று).
(அதற்கு ஸுலைமான்:) “நீ உண்மை கூறுகிறாயா அல்லது பொய்யர்களில் நீ இருக்கிறாயா என்பதை நாம் விரைவிலேயே கண்டு கொள்வோம்” என்று கூறினார்.

“என்னுடைய இந்தக் கடிதத்தைக் கொண்டு செல்; அவர்களிடம் இதைப் போட்டு விடு; பின்னர் அவர்களை விட்டுப் பின் வாங்கி; அவர்கள் என்ன முடிவு செய்கிறார்கள் என்பதைக் கவனி” (என்று கூறினார்).

(அவ்வாறே ஹுது ஹுது செய்ததும் அரசி) சொன்னாள்: “பிரமுகர்களே! (மிக்க) கண்ணியமுள்ள ஒரு கடிதம் என்னிடம் போடப்பட்டுள்ளது.”

நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது.

“நீங்கள் என்னிடம் பெருமையடிக்காதீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்” (என்றும் எழுதப்பட்டிருக்கிறது).

எனவே பிரமுகர்களே! “என்னுடைய (இந்த) விஷயத்தில் ஆலோசனை கூறுவீர்களாக! நீங்கள் என்னிடம் நேரிடையாகக் கருத்துச் சொல்லாதவரை நான் எந்த காரியத்தையும் முடிவு செய்பவளல்ல” என்று கூறினாள்.

“நாங்கள் பெரும் பலசாலிகளாகவும், கடினமாக போர் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கிறோம்; (ஆயினும்) முடிவு உங்களைப் பொறுத்தது, என்ன முடிவு எடுக்கிறீர்கள் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள்” என்று அவர்கள் சொன்னார்கள்.

அவள் கூறினாள்: “அரசர்கள் ஒரு நகரத்துள் (படையெடுத்து) நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறு தான் இவர்களும் செய்வார்கள்.

“ஆகவே, நிச்சயமாக நான் அவர்களுக்கு ஓர் அன்பளிப்பை அனுப்பி, (அதைக் கொண்டு செல்லும்) தூதர்கள் என்ன கொண்டு வருகிறார்கள் என்பதைப் பார்க்கப் போகிறேன்.”
அவ்வாறே (தூதர்கள்) ஸுலைமானிடம் வந்தபோது; அவர் சொன்னார்: “நீங்கள் எனக்குப் பொருளைக் கொண்டு உதவி செய்(ய நினைக்)கிறீர்களா? அல்லாஹ் எனக்குக் கொடுத்திருப்பது, உங்களுக்கு அவன் கொடுத்திருப்பதை விட மேலானதாகும்; எனினும், உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்கள் தான் மகிழ்ச்சி அடைகிறீர்கள்!

“அவர்களிடமே திரும்பிச் செல்க; நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத (பலமுள்ள) ஒரு பெரும் படையைக் கொண்டு அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களைச் சிறுமைப் படுத்தி, அவ்வூரிலிருந்து வெளியேற்றிவிடுவோம், மேலும் அவர்கள் இழிந்தவர்களாவார்கள்” (என்று ஸுலைமான் கூறினார்).

“பிரமுகர்களே! அவர்கள் என்னிடம் வழிபட்டவர்களாக வருமுன், உங்களில் யார் அவளுடைய அரியாசனத்தை என்னிடம் கொண்டுவருபவர்?” என்று (ஸுலைமான் அவர்களிடம்) கேட்டார்.
ஜின்களில் (பலம் பொருந்திய ஓர்) இஃப்ரீத் கூறிற்று; “நீங்கள் உங்கள் இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன் அதை நான் உங்களிடம் கொண்டு வந்து விடுவேன்; நிச்சயமாக நான் அதற்கு சக்தியுள்ளவனாகவும், நம்பிக்கைக்கு உரியவனாகவும் இருக்கிறேன்.”

இறைவேதத்தின் ஞானத்தைப் பெற்றிருந்த ஒருவர்: “உங்களுடைய கண்ணை மூடித்திறப்பதற்குள், அதை உங்களிடம் கொண்டு வந்து விடுகிறேன்” என்று கூறினார்; (அவர் சொன்னவாறே) அது தம்மிடம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும்: “இது என்னுடைய இறைவனின் அருட் கொடையாகும் நான் நன்றியறிதலுடன் இருக்கின்றேனா, அல்லது மாறு செய்கிறேனா என்று (இறைவன்) என்னைச் சோதிப்பதற்காகவும்; எவன் ஒருவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகின்றானோ அவன் நன்றி செலுத்துவது அவனுக்கே (நன்மை)யாவும்; மேலும், எவன் (நன்றி மறந்து) மாறு செய்கிறானோ (அது அவனுக்கே இழப்பாகும்; ஏனெனில்) என் இறைவன், (எவரிடத்தும்) தேவைப் படாதவனாகவும், மிகவும் கண்ணியம் மிக்கவனாகவும் இருக்கின்றான்” என்று (ஸுலைமான்) கூறினார்.

(இன்னும் அவர்) கூறினார்: “(அவள் கண்டு அறிந்து கொள்ள முடியாதபடி) அவளுடைய அரியாசன(த்தின் கோல)த்தை மாற்றி விடுங்கள்; அவள் அதை அறிந்து கொள்கிறாளா, அல்லது அறிந்து கொள்ள முடியாதவர்களில் ஒருத்தியாக இருக்கிறாளா என்பதை நாம் கவனிப்போம்.”

ஆகவே, அவள் வந்த பொழுது, “உன்னுடைய அரியாசனம் இது போன்றதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவள்: “நிச்சயமாக இது அதைப் போலவே இருக்கிறது” என்று கூறினாள்; இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்று ஸுலைமான் கூறினார்).

அல்லாஹ்வையன்றி (மற்றவர்களை) அவள் வணங்கிக் கொண்டிருந்ததுதான் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தது நிச்சயமாக அவள் காஃபிர்களின் சமூகத்திலுள்ளவளாக இருந்தாள்.

அவளிடம்: “இந்த மாளிகையில் பிரவேசிப்பீராக!” என்று சொல்லப்பட்டது; அப்போது அவள் (அம் மாளிகையின் தரையைப் பார்த்து) அதைத் தண்ணீர்த் தடாகம் என்று எண்ணிவிட்டாள்; எனவே (தன் ஆடை நனைந்து போகாமலிருக்க அதைத்) தன் இரு கெண்டைக் கால்களுக்கும் மேல் உயர்த்தினாள்; (இதைக் கண்ணுற்ற ஸுலைமான்), “அது நிச்சயமாகப் பளிங்குகளால் பளபளப்பாகக் கட்டப்பட்ட மாளிகைதான்!” என்று கூறினார். (அதற்கு அவள்) “இறைவனே! நிச்சயமாக, எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன்; அகிலங்களுக்கெல்லாம் இறைவனான அல்லாஹ்வுக்கு, ஸுலைமானுடன் நானும் முற்றிலும் வழிபட்டு) முஸ்லிமாகிறேன்” எனக் கூறினாள். அல்குர்ஆன் 27:20-44
மஆரிப் அணைக்கட்டு
ஏமன் நாட்டை சேர்ந்த மஆரிப் என்ற ஊருக்கு அருகில் சபவு கோத்திரத்தார் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ராணியான துப்பவு பரம்பரையில் வந்த பல்கீஸ் ராணியின் தலைமையில் சூரியனை வணங்கி வந்தனர்.


Houses of Sabau People
சபவு கூட்டத்தார் வாழ்ந்த வீடுகள்
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன. “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).

ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.

அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா? அல்குர்ஆன் 34:15-17


Maarib Dam
உடைந்து போன அணைகட்டின் சிதிலங்கள்
உடைந்து போன பழைய அணைக்கட்டிற்க்கு சிறிது உயரத்தில் ஐக்கிய அரபு நாடுகளின் தலைவரால் கட்டப்பட்ட அணை இப்பொழுது தண்ணீரை தேக்கி வைக்கப் பயன்படுகிறது.
குகைவாசிகள்
அல்லாஹ் தன் திருமறையில் பின்வாறு விவரிக்கிறான்.

(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள்.

ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம்.

பின்பு, (அக்குகையில் தங்கியிருந்த) இருபிரிவினர்களில் எப்பிரிவினர், தாங்கள் (குகையில்) தங்கியிருந்த கால அளவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைச் சோதிப்பதற்காக அவர்களை நாம் எழுப்பினோம்.

(நபியே!) நாம் உமக்கு அவர்களுடைய வரலாற்றை உண்மையைக் கொண்டு அறிவிக்கிறோம்; நிச்சயமாக அவர்கள் இளைஞர்கள் - தங்கள் இறைவன் மீது ஈமான் கொண்டார்கள்; இன்னும் நாம் அவர்களை நேர் வழியில் அதிகப்படுத்தினோம்.

அவர்கள் (கொடுமைக்கார அரசன் முன்னிலையில்) எழுந்து நின்று “வானங்களுக்கும், பூமிக்கும் இறைவனாகிய அவனே, எங்களுடைய இறைவன்; எக்காலத்தும் அவனையன்றி வேறு எவரையும் நாயனென்று அழைக்க மாட்டோம்; (அப்படிச் செய்தால் குஃப்ரில் கொண்டு சேர்க்கும்) - வரம்பு மீறியதைச் சொன்னவர்கள் ஆவோம்” என்று அவர்கள் உறுதியாகக் கூறிய நிலையில் அவர்கள் இதயங்களை நாம் வலுப்படுத்தினோம்.

எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி வேறு நாயனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் அவற்றின் மீது தெளிவான அத்தாட்சியைக் கொண்டு வரவேண்டாமா? ஆகவே அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டுபவனை விட அநியாயக்காரன் யார்? (என்றும் கூறினார்கள்).

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) “நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?” எனக் கேட்டார்; “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்” எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) “நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்” (என்றும் கூறினர்).

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்: “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.

(அவர்கள்) மூன்று பேர் தாம்; அவர்களில் நான்காவது அவர்களுடைய நாய் என்று (சிலர்) கூறுகின்றனர்(இல்லை) அவர்கள் ஐந்து பேர் தாம்; - அவர்களில் ஆறாவது அவர்களுடைய நாய்” என்று மறைவானதை ஊகம் செய்து (சிலர்) கூறுகிறார்கள்; இன்னும் (சிலர்) “ஏழுபேர் - அவர்களில் எட்டாவது அவர்களுடைய நாய்” என்று சொல்கிறார்கள் - (நபியே!) அவர்களுடைய எண்ணிக்கையை என்னுடைய இறைவன் தான் நன்கறிவான்; சிலரைத் தவிர, மற்றெவரும் அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக! ஆகவே, அவர்களைப் பற்றி வெளிரங்கமான விஷயம் தவிர (வேறெது பற்றியும்) நீர் தர்க்கம் செய்ய வேண்டாம்; இன்னும் அவர்களைக் குறித்து இவர்களில் எவரிடமும் நீர் தீர்ப்புக் கேட்கவும் வேண்டாம். அல்குர்ஆன் 18:9-22


Bones of Cave peopleBones of Cave people
அவர்களது எலும்புகள்

குகை
Jaw bones of Cave people's dog
அந்த நாயின் மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு
அவர்களது சடலங்கள் குகைக்குள் வெவ்வேறு கல்லறைக்குள் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஓரே கல்லறைக்குள் மாற்றப்பட்டன. இப்பொழுதும் அவர்களது எலும்புகளை கல்லறைக்குள் காணலாம்.

இக்குகை ஜோர்டான் நாட்டு தலைநகரம் அம்மானுக்கு அருகில் ரக்கீம் என்ற இடத்தில் இருக்கிறது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம்
அரேபியாவில் உள்ள மக்காவில் கி.பி. 571 ல் ஆமினா, அப்துல்லாஹ் அவர்களுக்கும் மகனாய் பிறந்து, பெற்றோரை இழந்து பாட்டனார் அப்துல் முத்தலிபு ஆதரவில் வளர்ந்து தீய செயல்கள் அனைத்திலிருந்தும் சிறு வயதிலேயே விலகியும் அல்அமீன் என்ற சிறப்பு பெயர் பெற்றவர்தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள்.

அவர் நாற்பது வயதை அடைந்ததும் மக்காவிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜபலுன்நூர் என்ற இந்த மலையின் உச்சியிலுள்ள ஹிரா குகைக்கு சென்று தனிமையில் இருப்பது வழக்கம். சிலை வணக்கம், விபச்சாரம், மது அருந்துதல், பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், கோத்திரங்களுக்கிடையே இருந்த பகைமை போன்ற தமது மக்களின் தீயச் செயல்கள் நிறைந்த வாழ்க்கை முறைகள் அவரை பெரிதும் கவலைப்படச்செய்தன. ஹிரா குகையில் பல நாட்கள் தொடர்ந்து தியானம் செய்வது அவரது வழக்கம். ஒரு நாள் அவர் ஹிரா குகையில் இருந்த போது அல்லாஹ்வின் கட்டளைப்படி வானத்திலிருந்து இந்த மலைக்கு இறங்கி வந்த ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் என்ற வானவர் அவரிடம் ஓதுவீராக என்றார். அதனைக்கேட்டு பயந்து நடுங்கி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் எனக்கு ஓத தெரியாது என்று கூறினார். வானவர் அவரை இறுக அணைத்து மீண்டும் ஓதுவீராக என்றார். அதற்க்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் நான் அறியேன் என்றார். மூன்றாவது முறையும் இவ்வாறே நடந்தது. பிறகு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை வானவர் ஓதிக் காட்டினார்.


Hira Cave
ஹிரா குகை
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
“அலக்” என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.

ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.

அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.

மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். அல்குர்அன் 96:1-5


இதற்க்கு பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்றுவிட்டார். இந்த வான்மறை, அந்தந்தக் காலத்தின் நிலைமைக்கும் அவசியத்திற்கும் தக்கவாறு, - பெருமானார் வாழ்ந்த பிந்திய 23-வருடங்களில்- கொஞ்சங் கொஞ்சமாக அருளப்பெற்று பூர்த்தி பெற்றது.

மக்காவில் வாழ்ந்த 13-வருடங்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கு கடுமையான துன்பங்கள் ஏற்ப்பட்டன. மக்காவில் வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டது. மக்காவிலிருந்து 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மதினாவிற்க்கு ஹிஜ்ரத் செய்யும்படி நபிகள் தமது தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். ஜம்பத்து மூன்றாவது வயதில் மக்காவில் உள்ள தன் வீட்டிலிருந்து எதிரிகளுக்கு தெரியாமல் வெளியேறினார். அவரது உற்ற தோழரான அபுபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஜபலுஸவ்ரின் என்ற இந்த மலை உச்சிக்கு சென்றார். எதிரிகளின் கண்களில் படாமலிருக்க இந்த குகையில் மூன்று நாட்கள் மறைந்திருந்தனர். குகை வாயில் வரை வந்த எதிரிகளை கண்டு பயந்த அபுபக்கரின் காதில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கவலைப்படவேண்டாம் அல்லாஹ் நம்மோடு இருக்கிறான் என்று கூறினார்கள்.
Jablusawr Cave
ஜபலுஸவ்ரின் குகை
எதிரிகள் சென்றவுடன் இருவரும் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் ஒட்டகத்தில் மதினாவிற்க்கு சென்றார்கள். மதினாவிற்க்கு சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குபாவிற்க்கு வந்து சேர்ந்ததும் அவர்கள் வந்த ஒட்டகம் அங்கே மண்டியிட்டது.

ஜபலுஸவ்ரின் குகை உட்புறம்
அந்த இடத்தில் அல்லாஹ்வின் கட்டளைப்படி நான்கு நாள்களில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தலைமையில் குபா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இந்த குபா பள்ளியை பிற்காலத்தில் சவுதி அரசாங்கம் புதிப்பித்தது.
Kuba Mosque
குபா பள்ளிவாசல்
அதன்பின் மதினாவுக்கு செல்லும் வழியில் வாதிசாலிமில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முதலாவதாக ஜுமா தொழுகை நடத்தியது இந்த பள்ளியில்தான். இதற்க்கு மஜிதில் ஜுமா என்று பெயர். இந்த பள்ளியை பிற்காலத்தில் சவுதி அரசாங்கம் புதிப்பித்தது.
Juma Mosque
ஜுமா பள்ளிவாசல்
மதினாவிற்க்கு வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முதலில் செய்த பணி முஸ்லிம்களின் கலாச்சார மையமாக ஒரு பள்ளியை கட்டியதுதான். அன்று கட்டப்பட்ட அந்த சிறிய பள்ளி பிறகு புதுபித்துக் கட்டப்பட்டது. இப்பொழுது இந்த மஜிதில் நபவி லட்சக்கணக்கானோர் தொழுகை நடத்தக் கூடிய விசாலமான இடமாக உள்ளது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் குர்ஆன் வகுப்புகளும், நீதி மன்றமும், அலுலகமும், பாரளுமன்றமும் இந்த பள்ளியில்தான் செயல்படுத்தப் பட்டது.
பத்ரு 
நிராகரிப்போரின் தொல்லைகளை தாங்க முடியாமல் மக்காவிலிருந்து மதினாவிற்க்கு சென்ற முஸ்லீம்களை மதினாவிலும் நிம்மதியாக வாழ மக்காவாசிகள் விடவில்லை. மக்காவிலிருந்து வந்த ஆயுதம் தாங்கிய ஆயிரம் குரைசிப் படையினர் மதினாவிற்க்கு 80 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள இந்த பத்ரு என்ற இடத்திற்க்கு வந்த பொழுது முஸ்லீம்கள் தங்களை தற்காத்து கொள்ளும் சூழ்நிலை ஏற்ப்பட்டது. ஆயுதங்கள் குறைவாக உள்ள 313 ஸஹாபாக்களை மட்டும் கொண்ட முஸ்லீம் படை ஒரே இறைவனிடமும் அவனுடைய தூதரிடமும் அசையா நம்பிக்கை வைத்து நிலை குலையாமல் நின்று அவர்களை எதிர்த்து போர் செய்த பத்ரு களம் இதுதான்.


Badr battle field
இரத்தம் சிந்தி வீரத்தியாகிகள் 13 பேர்களின் அடக்கஸ்தலங்கள் இங்குதான் உள்ளன. அடக்கஸ்தலங்களை கட்டி எழுப்புவதும் அடக்கம் செய்தவர்களை அழைத்து பிரார்த்திப்பதும் இஸ்லாத்தில் மிகக் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

காபிர்களான குரைசிப் படையினர் முகாமிட்ட இடம்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் எதிரியான அபூஜஹல், முஆத் மற்றும் முஅவ்வித் இரண்டு அன்சாரி வாலிபர்களால் கொல்லப்பட்ட இடம்.
The place where two youngsters killed Abujahil
அபூஜஹல் கொல்லப்பட்ட இடம்.
அல்லாஹ்வின் கட்டளைப்படி வானிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான வானவர்கள் முஸ்லீம் படையினருடன் இணைந்து போரிட்டனர். இறைவன் உதவியினால் பத்ரில் முஸ்லீம்கள் வெற்றி பெற்றார்கள். மஜ்ஸித் ஹாரிஸ் என்ற இந்த பள்ளி உள்ள இடத்தில் தான் அன்று பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் முகாமிட்டு தங்கியிருந்தார்கள்.
Harris Mosque
மஸ்ஜித் ஹாரிஸ்
(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது. அல்குர்ஆன் 3:13
உஹது
மக்கா குரைசிகளும் பிற கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் மூவாயிரம் படையினர் மதினாவை தாக்குவதற்க்கு உஹது என்ற இடத்திற்க்கு வந்தனர். அப்துல்லா பின் சுபைர் ரளியல்லாஹு அன்ஹு தலைமையில் 50 வில்போர் வீரர்களை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் இந்த ஜபலுர் ருபாத்துக்கு உச்சியில் நிற்கவைத்தார்கள். மேலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் கட்டளை வரும்வரை இந்த குன்றிலிருந்து கீழே இறங்காமல் எதிரிகளை நோக்கி அம்பெய்தி கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். மதினாவிற்க்கு மிக அருகில் உள்ள உஹதில் 700 நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பார்களுடன் மிகக் கடுமையாக போரிட்டது இந்த பள்ளத்தாக்கில்தான் (படம் 15a).


Jabalur Rubath
ஜபலுர் ருபாத்
The valley of Uhd
படம் 15a
முஸ்லீம்களை எதிர்த்து போரிட எதிரிகளால் முடியவில்லை. தங்கள் தலைவர்களும் கொடியை தாங்க கூடியவர்களும் கொல்லப்பட்டதால் நிராகரிப்போர் போரிலிருந்து பின்வாங்கி சென்றனர். இதைக் கண்டதும் வில்போர் வீரர்களில் பத்து நபர்களை தவிர அனைவரும் பெருமானாரின் கட்டளையை புறக்கணித்து குன்றிலிருந்து இறங்கி எதிரிகள் விட்டுச்சென்ற ஆயுதங்களையும் பொருள்களையும் சேகரிக்க தொடங்கினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காபிர்களின் குதிரைப்படையினர் குன்றின் பின்பக்கமாக மலைமீது ஏறி முஸ்லீம்களுக்கு எதிராக போரிட தொடங்கினார்கள். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தினால் ஆங்காங்கு சிதறி ஓடினார்கள். ஒரு சிலர் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். இந்த சூழ்நிலையில் சிக்கி ஏராளமான முஸ்லீம் படையினர் வீரத்தியாகியாயினர்.

இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான் அல்குர்ஆன் 3:152

முஸ்லீம்கள் மீண்டும் வலிமைபெற்று மிக்க வீரத்துடன் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்கியதால் அவர்கள் போர்களத்தை விட்டு ஓடிச்சென்றனர். உஹது போரில் தியாகிகளான சுமார் 60 ஷஹபாக்களின் கப்ருகள் இந்த சுற்று சுவருக்குள்தான் உள்ளன. அதற்க்கு நடுவில் உள்ளது பெருமானாரின் தந்தையின் சகோதரர் ஹம்ஸா பின் அப்துல்முத்தலிபின் கப்ரு ஆகும்.


கந்தக் - அகழ்ப்போர் 
சமாதான சூழ்நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. குரைசிகளும் மேலும் ஆறு கோத்திரத்தாரும் சேர்ந்து சுமார் பத்தாயிரம் படையினரும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட ஒட்டகங்களும் ஏராளமான ஆயுதங்களும் குதிரைபடையினரும் ஆரவாரத்துடன் கூட்டுப்படையாக மதினாவை தாக்க புறப்பட்டு சென்றனர். இந்த செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது தோழர்களுடன் போர் தந்திரங்களை பற்றி ஆலோசனை செய்தனர். மதினாவை சுற்றிலும் ஓர் அகழியை தோண்டி எதிரிகளின் முன்னேற்றத்தை தடை செய்வது என்ற பாரசீக போர் தந்திரத்தை ஸல்மான் பாரிஸ் ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் முன் வைத்தார்கள். பெருமானார் அதை வரவேற்று ஒரு வாரம் கடினமாக உழைத்து ஒன்பதாயிரம் அடி நீளமும் குதிரைப் படையினரால் எளிதில் தாண்டமுடியாத அளவுக்கு அகலமும் ஆழமும் கொண்ட ஓரு அகழியை தோண்டினார்கள். பட்டினியால் நிமிர்ந்து நிற்க முடியாமல் தமது வயிற்றில் கற்களை கட்டிவைத்துக் கொண்டு பெருமானாரும் தோழர்களும் அந்த அகழியை தோண்டினார்கள். இந்த சாலை இருக்குமிடம் அந்த அகழியை சேர்ந்தது தான்.


அகழிக்கு மறுபுறம் வந்த கூட்டுப் படையினர் அந்த அகழியைப் பார்த்து வியந்து நின்றனர். அகழிக்கு மறுபுறம் ஸல்வு மலை உச்சியிலும் உள்ள முஸ்லிகளிடம் மட்டும் போர் சில நாட்கள் நடந்தது. முஸ்லீம்களிடம் ஏற்படுத்திக் கொண்ட சமாதான ஒப்பந்ததையும் மீறி யூதர்கள் எதிரிகளிடம் சேர்ந்து கொண்டனர். மஸ்ஜித் பத்ஹ் என்ற இந்த இடத்தில்தான் பெருமானாரின் முகாம் இருந்தது.

இந்த நிலைமை ஒரு சில நாட்கள் நீடித்தது. ஒரு இரவில் பெரும் இரைச்சலுடன் காற்று வீசியது. பலத்த மழை பொழிந்தது. இடியும் மின்னலும் தொடர்ந்தது. அந்த சூறாவளி காற்றில் முகாம்கள் பறந்து சென்றன. முஸ்லீம்கள் அகழியை தாண்டி தாக்க வருவதாக தவறாக எண்ணிய கூட்டுப் படையினர் பொழுதும் விடியும் முன்னரே கந்தக்கை விட்டுச் சென்றனர். அல்லாஹ்வின் இந்த தந்திரம் முஸ்லீம்களை காப்பாற்றியது. தங்களை காப்பாற்றிய அல்லாஹ்விற்க்கு முஸ்லீம்கள் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து நன்றி செலுத்தினார்கள்.
கைபர்
ஹுதைபியா ஒப்பந்தம் வாயிலாக மதினாவில் மீண்டும் சமாதானம் நிலை நாட்டப்பட்டது. ஆனால் வஞ்சகர்களான யூதர்களிருக்கும் வரையிலும் முஸ்லீம்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பது கந்தர் தரும் படிப்பினையாகும். நூறு குதிரை வீரர்களும் நூற்றி அறுபது காலாட்படையினரும் பெருமானாரின் தலைமையில் மதினாவிலிருந்து கைபரை நோக்கி புறப்பட்டு சென்றனர். இது கைபரில் உள்ள யூதர்களின் கோட்டையாகும்.


Jews Fort
முஸ்லீம்கள் பல நாட்கள் இந்த கோட்டையை முற்றுக்கையிட்டதும் கடுமையான மோதல் ஏற்ப்பட்டது. யூதர்கள் கோட்டைக்கு வெளியே வந்து சரணடைந்தார்கள். கோதுமை வைக்கோலும் களிமண்ணும் சேர்த்து பிசைந்து பேரிச்ச மரக்கட்டைகள் சேர்த்து கட்டப்பட்டதுதான் இந்த மூன்றடுக்க கோட்டையாகும்.

கைபரில் யூதர்களின் வீடுகளின் சிதிலங்கள் இப்பொழுதும் உள்ளன.

கைபரில் உள்ள ஒரு யூததேவாலயம்.
நிராகரிப்போர்களை கொன்றுவிடுவது என்பது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் கொள்கையல்ல. முஸ்லீம்களிடம் சரணடைந்த யூதர்களிடம் பெருமானார் மிக கண்ணியமாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமிருந்து கைபற்றபட்ட தவ்ராத் வேதத்தின் ஒரு சில பக்கங்கள் அவர்களிடமே திருப்பி கொடுக்கப்பட்டது. விவசாய நிலங்களின் உரிமையை தங்களுக்கே கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். யூதர்களுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்ப்படுத்திய பிறகுதான் முஸ்லீம்கள் கைபரைவிட்டு திரும்பி சென்றார்கள்.
முஅத்தா போர்
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் சிரியாவை சேர்ந்த புஸ்ராவில் உள்ள கிராக்கியஸ் மன்னரின் கவர்னரிடம் ஒரு தூதுவரைஅனுப்பினார்கள். கி.பி. 629ல் பெருமானாரின் தூது செய்தியை ஹாரிஸ் இப்னு உமைருல் அஸைதி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொதிக்கும் பாலைவனங்களையும் பள்ளத்தாக்குகளையும் தனியாக குதிரை மீது அமர்ந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் கடந்து தற்பொழுது ஜோர்டானில் உள்ள அல்கரக்கிற்க்கு அருகிலுள்ள முஅத்தா என்ற இடத்திற்க்கு வந்து சேர்ந்தார். பெருமானாரின் கடிதத்தை கொடுத்ததும் அந்த தூதுவர் கருணையின்றி கொலை செய்யப்பட்டார். தூதுவரை கொலை செய்யக்கூடாது என்ற பொது நீதியை கடைப்பிடிக்காத இந்த கொடிய செயலுக்காக தமது வளர்ப்பு மகனான ஜைது பின் ஹாரிஸாவின் தலைமையில் மூவாயிரம் வீரர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் அனுப்பினார்கள். அவர்களை வழியனுப்பும் போது பெருமானார் “எதிரிகளைச் சார்ந்த பெண்களையும் சிறுவர்களையும் முதியோர்களையும் கொலை செய்யக் கூடாது, கட்டிடங்களை இடிக்க கூடாது, மரங்களை அழிக்க கூடாது. அல்லாஹ் உங்களுடன் இருப்பானாக” என்று கூறினார்கள்.

மதினாவிலிருந்து புறப்பட்ட படையினர் மனித நடமாட்டமற்ற வட அரேபிய பாலைவனங்கள் வழியாக சென்று இப்பொழுது ஜோர்டானை சேர்ந்த முஅத்தாவிற்க்கு வந்தடைந்தனர். சுமார் இரண்டு லட்சம் வீரர்களை கொண்ட ரோமப் படையினர் வெறும் மூவாயிரம் முஸ்லீம் படையினருடன் போரிட்ட முஅத்தா போர்களம் இது தான். 


பெருமானாரின் கொடியை தாங்கி எதிரிகளின் நடுவில் முன்னேறிய ஜைதுபின் ஹாரிஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மிக வீரமாக போராடி வீர மரணம் அடைந்தார். அதற்க்கு பின் ஜாபர் பின் அபுதாலிபு ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடியை பெற்றுக் கொண்டு எதிரிகளின் நடுவில் நுழைந்தார். அவரது கைகள் வெட்டப்பட்டு கீழே விழுந்ததும் அந்த கொடியை தன் கக்கத்தில் இறுக்கிக் கொண்டு முன்னேறினார். அவரது கால்களும் அதே இடத்தில் வெட்டப்பட்டது அவரும் வீரமரணம் அடைந்தார். திடீரென முன்னேறி வந்த அப்துல்லாஹ் இப்னு ரவாஹ ரளியல்லாஹ் அன்ஹு அவர்கள் அந்த கொடியை தாங்கி எதிரிகளின் மீது பாய்ந்தார். அவரும் இதே இடத்தில் வீர மரணம் அடைந்தார்.
இங்கு எழுந்து நிற்ப்பது அவர்களது கல்லறைகள் அல்ல. வீரமரணத்திற்க்கு நினைவாக எழுப்பபட்ட அடையாளங்களாகும். அந்த மூன்று ஷஹாபாக்களின் மரணச் செய்தியை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் ஷஹாபாக்களின் ஆத்மாக்கள் சொர்கத்திற்க்கு உயர்த்தபட்டதை மக்களுக்கு அறிவித்தார்கள். மூன்று படைத்தலைவர்களும் இறைவனடி சேர்ந்ததும் சுறுசுறுப்பும் திறமையும் உள்ள ஹாலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் படைத் தலைமையேற்று படையினரை ஒருங்கிணைத்தார். மதினாவிலிருந்து துணைப்படையினர் வந்திருப்பதாக எண்ணிய ரோமப் படையினர் போர்களத்தைவிட்டு திரும்பி சென்றனர். படைபலம் அல்ல இறைவனுடைய உதவிதான் வெற்றிக்கு அடிப்படை என்பது இதன் மூலம் நிரூபிக்கப் பட்டுவிட்டது.
மக்கா வெற்றி
சுமார் பத்தாயிரம் முஸ்லீம் தோழர்களுடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் பாலைவனங்கள் வழியாக முன்னறிவிப்பின்றி மக்காவை நோக்கி சென்றார்கள். தம்மையும் தங்கள் தோழர்களையும் வீட்டைவிட்டு வெளியேற்றி ஏராளமான கொடுமைகளுக்கு ஆளாக்கி துன்புறுத்திய மக்கா குரைசிகளும் அவர்களது தலைவர்களும் நிர்பந்த சூழ்நிலையில் பெருமானாரிடம் சரணடைந்தார்கள். அப்பொழுது கருணையின் சிகரமான பெருமானார் அவர்கள் மன்னித்துவிட்டதாக அறிவித்தார்கள். அவர்களது மதத்திற்க்கும் நம்பிக்கைக்கும் ஏற்றவாறு வாழ அவர்களுக்கு சுதந்திரம் அளித்தார்கள். வாளால்தான் இஸ்லாம் பரப்பப்பட்டது என்பது பொய்யான கருத்தாகும் என்பதை நிரூபித்த ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இது. மதத்தின் பெயரால் போரிடாத முஸ்லீமல்லாத அனைவருக்கும் நன்மையே செய்ய வேண்டும் நீதம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை குர்ஆன் கூறுகிறது.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள். அல்குர்ஆன் 60:8-9

அல்லாஹ் அல்லாத தெய்வங்களை அழைத்து பிரார்திப்பவர்களை நீங்கள் ஏசக்கூடாது என்பதை அல்லாஹ் முஸ்லீம்களுக்கு கட்டளையிடுகிறான்.

அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் - இவ்வாறே ஒவ்வொரு சமூகத்தாருக்கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அவன் அறிவிப்பான். அல்குர்ஆன் 6:108 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் மறைவு
கிருத்துவ ஆண்டு 632 ஜுன் மாதம் 8ஆம் நாள் தமது 63ம் வயதில் அல்லாஹ்வின் இறைத்தூதர் அவர்கள் இவ்வுலக வாழ்வை விட்டு பிரிந்து சென்றார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டில் வைத்துதான் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் வஃபாத்தானார்கள். அதே இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். மதினாவில் மஸ்ஜிது நபவி பள்ளியை ஒட்டியுள்ள இந்த இடத்தில்தான் பெருமானார் அடக்கஸ்தலம் இருக்கிறது. அபுபக்கர் சித்தீக், உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மண்ணறைகள் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் மண்ணறைக்கு பக்கத்தில் தான் இருக்கிறது.



பெருமானாரின் காலம் முதல் இன்று வரையிலும் மதீனாவில் உள்ள ஒரு பொது அடக்கஸ்தலம்தான் இது. இதில்தான் பெருமானாரின் மனைவியரும், நபிதோழர்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
கிருத்துவ ஆண்டு 570ல் ஏப்ரல் மாதத்தில் மக்காவில் அப்துல்லாஹ் ஆமினாவிற்க்கு மகனாக பிறந்து சிறுவயதிலேயே அனாதையாக வளர்ந்து எழுதப் படிக்க அறியாமலும் உண்மையாளன் என்று எதிரிகளாலும் போற்றப்பட்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்கள் தமது நாற்பது வயது வரையிலும் இவ்வுலகத்திற்க்கு எவ்வித அற்புதத்தையும் எடுத்துக் கூறவில்லை. நாற்பது வயதிற்க்கு பிறகு தனக்கு அல்லாஹ்விடமிருந்து தமக்கு கிடைத்தாக எடுத்தறிவித்த வாசகங்களின் வரலாற்று சம்பந்தமான உண்மை ஆதாரங்களைத்தான் நாம் இதுவரையிலும் பார்த்தோம்.

திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.
திருக்குர்ஆனையும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையையும் முன்மாதிரியாக வைத்து உங்கள் வாழ்கையை சரிசெய்து கொள்ளுங்கள். அதுமட்டும்தான் இவ்வுலகத்தில் சாந்தியையும் சமாதானத்தையும் மறுமையில் சொர்கத்தையும் அடைவதற்க்கான ஓரே வழி.

0 comments: