அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Saturday 7 December 2013

மனைவியை மகிழ்விப்பது எப்படி? – 07

இறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது

• தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப் பகுதியில் எழுப்புங்கள்.

• உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.

• காலை-மாலை நேரங்களில் ஓதக் கூடியதிக்ரு (இறை நினைவுகளை – நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்) அவளுக்கு போதியுங்கள்.

• இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.

• ஹஜ்/உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.

• மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்யுங்கள்.


• அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.

• உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்புக் கொடுங்கள். அப்படி வரும் பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.

• அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.

• பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.

• உங்களுக்கு முன் மனைவி மரணித்து விட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கு மனைவி (உயிருடன் இருக்கும் பொழுது) உதவி செய்தது போல் செய்து அன்பு பாராட்டுங்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.....

0 comments: