அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Saturday 7 December 2013

"இது தான் இஸ்லாம்" என்றால் " இது எனக்கு வேண்டும்" - லாரன் பூத்

Though it is a long article, it worth reading. May Allah lead us in the path of Jannah

தற்போதைய காலக் கட்டத்தில், இஸ்லாமை தழுவும் பலரும், குர்ஆனை முழுமையாக படித்து, பல வித ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் தான் தழுவுகின்றனர்.ஆனால் லாரன் பூத் அவர்களின் அனுபவம் வேறு விதமானது.


இவர் இஸ்லாமை தழுவுவதற்கு ஊன்று கோலாய் இருந்தது முஸ்லிம்களின் வாழ்க்கை முறை தான். பாலஸ்தீன முஸ்லிம்களின் அழகான வாழ்வை பார்த்து, தானும் முஸ்லிமாக வேண்டுமென்று ஆசைக் கொண்டவர் இவர். பின்னர் தான் குர்ஆனை படிக்க ஆரம்பித்திருக்கின்றார்.
இவருடைய இஸ்லாம் நோக்கிய பயணம் மற்றும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பிறகு இவருக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவற்றை படம் பிடிக்க முயற்சிப்பதே இந்த பதிவு...இன்ஷாஅல்லாஹ்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகோதரி லாரன் பூத். பெற்றோரிடமிருந்து சரியான அரவணைப்பு இருந்ததில்லை. சிறு வயதில் இறைவனிடம் வேண்டிக் கொள்வாராம்,

Please God, என் அம்மாவையும், அப்பாவையும் நாளைக்காவது என்னிடம் அன்பாக இருக்கவை.
டீனேஜ் பருவத்தின் போது பிரார்த்திப்பதை நிறுத்தி விட்டார். தன்னுடைய இருபதுகளில் மதமே வேண்டா மென்ற முடிவுக்கு வந்து விட்டார்,
வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருந்தேன். இனியும் எனக்கு மதங்கள் தேவையில்லை. Nietzsche சொன்னதை நம்பினேன். அவர் கூறினார், 'கடவுள் இறந்து விட்டார். நாம் தான் அவரை கொன்றோம்' என்று
சகோதரி லாரன் பயின்ற பள்ளியில் மொத்தம் மூன்றே மூன்று முஸ்லிம் மாணவிகளாம். அந்த மாணவிகளிடம் இரண்டு விசயங்களை கவனித்திருக்கின்றார்.
ஒன்று, அவர்கள் கணக்கிலும் அறிவியலிலும் சிறந்து விளங்கினார்கள். இரண்டாவது, அவர்கள் ஆண்களுடன் டேடிங் (Dating) போனதில்லை.

9/11-க்கு பிறகு முஸ்லிம்கள் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் அவருக்குள் வளர ஆரம்பித்தன. முஸ்லிமல்லாதவர்களை கொல்வதே முஸ்லிம்களின் தலையாயப் பணி என்பதில் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தார். ஊடங்கங்கள் என்ன கூறினவோ அவற்றை அப்படியே நம்பினார்.

பிறகு, சில ஆண்டுகளில் பாலஸ்தீன பிரச்சனையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்தார். 2005-ஆம் ஆண்டு, மஹ்மூத் அப்பாசை பேட்டி காண்பதற்காக முதல் முறையாக மேற்கு கரைக்கு சென்றார்.
டெல்அவிவ்விற்கு விமானம் ஏறியபோதே மிகவும் பதற்றமடைந்தேன். அரேபியர்களை நினைத்து மிகவும் அஞ்சினேன். பேட்டி எடுக்க விடாமல் என்னை திருப்பி அனுப்பி விட மாட்டார்களா இஸ்ரேலியர்கள் என்று கூட தனிமையில் எண்ணிருக்கின்றேன்.

சுமார் ஐந்து நாட்கள் மேற்கு கரையில் தங்கியிருந்தார். இந்த ஐந்து நாட்களில் பாலஸ்தீனியர்கள் இவர் மீது காட்டிய அன்பில் இஸ்லாம் குறித்த அவரது தவறான எண்ணங்கள் பறந் தோட ஆரம்பித்தன.

என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக் கொண்டார்கள்?.என்னிடம்பரிவோடுகூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது.
இஸ்லாம் குறித்த எதிர்மறையான எண்ணங்கள் விலக ஆரம்பித்ததே தவிர, இஸ்லாமை ஆராய வேண்டுமென்ற வட்டத்திற்குள் இன்னும் லாரன் பூத் வரவில்லை. மது, பார்ட்டிகள் என வழக்கம் போல வாழ்க்கை செல்ல ஆரம்பித்தது.

2008-ல் மறு படியும் பாலஸ்தீன் பயணம். இந்த முறை பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க சென்றார். காசாவை இஸ்ரேல் விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையோடு சென்றார். இந்த பயணத்தின் போது தனக்குள் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.
சில நாட்கள் மட்டுமே பயணத்தை திட்டமிட்டிருந்த அவரது குழுவினருக்கு, இஸ்ரேல் மற்றும் எகிப்து ராணுவத்தின் கெடுபிடிகளால் ஒரு மாதம் வரை காசாவில் அடைந்திருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தன் குழந்தைகளின் பிரிவால் பரிதவித்து போனார் லாரன். ஒரு நாள், இந்த வேதனை தாங்க முடியாமல் அழுதுக் கொண்டிருக்க, அவருக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் ஒரு பாலஸ்தீனிய பெண்மணி.
"மன்னிக்கவும்" என்று கூறி தொடர்ந்த அவர் "உங்கள் குழந்தைகளை பிரிந்து எந்த அளவு துயரப் படுகின்றீர்கள் என்று எனக்கு புரிகின்றது" என்று கூறி லாரனை சமாதானப் படுத்த தொடங்கினார்.

பின்னர் தன்னுடைய கதையை லாரனிடம் சொல்ல ஆரம்பித்தார் அந்த பாலஸ்தீனிய பெண்மணி. அவர் மேற்கு கரையைச் சார்ந்தவராம். தனிப்பட்ட காரணத்திற்காக ஒருநாள் பயணமாக காசாவிற்கு வர வேண்டிய நிர்பந்தம். அவரை அனுமதித்தனர் இஸ்ரேலியர்கள்.

ஆனால், திரும்ப மேற்குகரைக்கு செல்ல முயற்சித்த போது, இவரது ஆவணங்களை கிழித் தெறிந்து, இவரை ஒரு வேனில் அடைத்து வைத்து கொடூரமாக நடந்துக் கொண்டார்கள் இஸ்ரேல் இராணுவத்தினர். அன்றிலிருந்து காசாவில் தவித்துக் கொண்டிருக்கின்றார் இந்த பெண்மணி.

இதனை கேட்ட லாரனுக்கு என்ன சொல்லுவதென்றே புரியவில்லை. கடந்த நான்கு வருடங்களாக தன்னுடைய கணவரையும், இரண்டு குழந்தைகளையும் பார்க்க வில்லை இந்த சகோதரி. ஆனால், இங்கே என்னுடன் அமர்ந்து கொண்டு, என்னுடன் அழுதுக் கொண்டு, என்னை சமாதானப் படுத்த முயன்று கொண்டிருக்கின்றார். அடுத்தவர் உணர்வறிந்து செயல்படும் இது போன்ற பண்பை எப்படி விளக்குவது என்று ஆரம்பிக்க கூட எனக்கு தெரியவில்லை.
பாலஸ்தீனியர்களின் அன்பும், அடுத்தவர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும், இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் தங்களது மார்க்கத்தின் மீதான அவர்களின் பற்றும் தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிடும் லாரன்,
இப்போதுஅரேபியர்களை மிகவும் விரும்ப ஆரம்பித்தேன். இருப்பினும் இன்னும் இஸ்லாத்தின் மேல் ஆர்வம் வரவில்லை.

ரமலான் மாதம் வந்தது. அகதிகள் முகாமில் தங்கியிருந்த ஒரு குடும்பம் சகோதரி லாரனை இப்தாருக்கு அழைத்திருந்தார்கள்.
பதினாறு உறுப்பினர்களை கொண்ட அந்த குடும்பம் சகோதரி லாரனை இன் முகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் லாரனுக்கோ கடுங் கோபம். யார் மீது தெரியுமா?...முஸ்லிம்களின் கடவுள் மீது....ஏன்?
இவர்களுக்கே சிறிதளவு தான் உணவு கிடைக்கின்றது. இந்த சூழ்நிலையில் இவர்களை நோன்பு நோற்க சொல்வது நியாயமா? நிச்சயமாக இவர்களது கடவுள் இரக்கமற்றவர் தான்.

ஆனால், அந்த குடும்பத்தினரோ பொறுமையுடன் விளக்கினார்கள். இவ்வுலகில் உள்ள எதையும் விட தாங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நேசிப்பதாகவும், அதனால், இறைவனின் கட்டளைக்கு இணங்கி நோன்பு நோற்று அவனுக்கு நன்றி செலுத்துவதாகவும் கூறினர்.

அவ்வளவு தான்.....
அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப் படி வாழ்ந்து வரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறி விட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.
'இது தான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக் கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழு மனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.

இது போன்ற வார்த்தைகள் தன்னிடமிருந்துவருமென்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்லாரன்.
பாலஸ்தீன மக்களுடன் தொடர்பு ஏற்பட்ட அதே காலக் கட்டத்தில் மேற்குலகின் பொருள் சார்ந்த வாழ்க்கை மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்தார் லாரன். போர்களில் மேற்குலகம் ஈடுபடுவதே, தம் மக்களின் உள்ளங்களில் உள்ள வெற்றிடத்தை திசை திருப்பத் தான் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார்.

மேற் சொன்ன நிகழ்வுகளில் இருந்து தொடங்கிய அவரது இஸ்லாம் நோக்கிய பயணம் சென்ற ஆண்டு நிறைவடைந்தது. இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார் லாரன் பூத்.
இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு சகோதரி லாரனும் விதி விலக்கல்ல. தன்னுடைய தவறான பழக்க வழக்கங்களை விட்டொழித்து விட்டார் சகோதரி லாரன் பூத்.

"எனக்கு புரியத் தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.
இஸ்லாமை ஏற்றுக் கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ள நான் தயாரா? – இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

ஆனால் காலப்போக்கில் இவற்றிலிருந்து விடுபட்டு விட்டேன். இஸ்லாமை ஏற்றுக் கொள்வது எளிதாகவே இருந்தது.
ஆம், இஸ்லாம் குறித்து நான் இன்னும் நிறைய படிக்க வேண்டும். பலரும் என்னிடம் கேட்கின்றார்கள் "நீங்கள் குர்ஆனை எவ்வளவுபடித்திருக்கின்றீர்கள்?" என்று. நான் கூறுவேன், சுமார் நூறு பக்கங்கள் என்று.
இதனை கேட்பவர்களில் சிலர் என்னை ஏளனம் செய்வதற்கு முன்னர் அவர்களுக்கு நான் ஒன்று கூறிக் கொள்ள விரும்புகின்றேன். குர்ஆன் என்னும் புத்தகம் என் வாழ்நாளுக்குரியது. இதில் அவசரப்பட நான் விரும்பவில்லை. படித்த வரை ஆழ்ந்து படிக்க முயற்சித்திருக்கின்றேன். படித்தவற்றை நினைவில் நிறுத்த பாடு படுகின்றேன். இது வாரப் பத்திரிகை அல்ல.
அரபி மொழி கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு சற்று நேரம் ஆகுமென்று நினைக்கின்றேன்.

By the way, நான்ஷியா வழியை பின்பற்றுகின்றேனா? அல்லது சன்னி வழியை பின்பற்றுகின்றேனா? என்ற கேள்விக்கு என்னால் பதில் கூற முடியாது. என்னை பொருத்த வரை, ஒரே இறைவன்...ஒரே இஸ்லாம் தான்.
இஸ்லாமிய முறையில் உடையணிவதும் எளிதாகவே இருந்தது. இனி சிகையலங்காரத்திற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை பாருங்கள்.
முகத்தை மூடும் விதமாக உடையணிவது எனக்கான ஒன்றாக தோன்றவில்லை. அப்படி உடையணியும் சகோதரிகளை நான் பெரிதும்மதிக்கின்றேன். ஆனால், இஸ்லாம் அதனை வலியுறுத்த வில்லை என்பது என்னுடைய புரிதல்.

என் மன மாற்றத்தை பூதாகரமாக்கின சில ஊடகங்கள். அவர்களுடைய கோபம் என் மீதானது அல்ல. அது இஸ்லாம் மீதானது. இவற்றை நான் பெரிதாக எடுத்து கொள்வதில்லை.

என் வாழ்க்கை முழுவதும் அரசியல் சார்ந்தே இருந்திருக்கின்றேன். பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றேன். இனியும் அப்படியே இருப்பேன்.
இஸ்லாமை ஏற்றுக் கொண்ட பிறகும் என் நட்புவட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி தான். என் முஸ்லிமல்லாத நண்பர்கள் ஆர்வமுடன் என்னிடம் கேட்பார்கள்.

•இஸ்லாம் உன்னை மாற்றி விடுமா?
•நாங்கள் இன்னும் உன் நண்பர்களாக தொடரலாமா?
•நாம் மது அருந்த வெளியே செல்லலாமா?
முதல் இரண்டு கேள்விகளுக்கு என்னுடைய பதில் 'ஆம்' என்பது. கடைசி கேள்விக்கான பதில், ஒரு பெரிய 'NO'.

என் அம்மாவை பொருத்தவரை, என்னுடைய மகிழ்ச்சி தான் அவருக்கு முக்கியம். நான் இஸ்லாமை ஏற்றுக்கொண்டதை அவரிடம்கூறியபோது, 'அந்த மார்க்கத்திற்கா மாறினாய்?, நீ புத்த மதத்திற்கு மாறியிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்' என்று கூறினார். இப்போது புரிந்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றார். என்னுடைய மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக் கூட பார்க்கவில்லை. I simply don’t want to.

மறுமணம் குறித்து சிந்திக்கும் மன நிலையில் இப்போது நான் இல்லை. என்னுடைய முந்தைய திருமண முறிவிலிருந்து தற்போது மீண்டுக் கொண்டிருக்கின்றேன். விவாகரத்து நடந்துக் கொண்டிருக்கின்றது.
நேரம் வரும் போது நிச்சயம் மறுமணம் குறித்து யோசிப்பேன். நான் ஏற்றுக் கொண்ட மார்க்கதிற்கேற்ப, என்னுடைய கணவர் நிச்சயம் முஸ்லிமாகத் தான் இருக்க வேண்டும்.

என்னிடம் பலரும் கேட்கின்றார்கள், 'உங்கள் மகள்களும் முஸ்லிமாவார்களா?' என்று.
எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஒருவருடைய உள்ளத்தை நாம் மாற்ற முடியாது.

ஆனால், என்னுடைய மன மாற்றத்தை அவர்கள் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், நான் இஸ்லாமை தேர்ந்தெடுத்ததை அவர்களிடம் சொன்ன போது அவர்கள் காட்டிய அணுகு முறை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சமையலறையில் அமர்ந்துக் கொண்டு அவர்களை அழைத்தேன், 'Girls, உங்களிடம் ஒரு செய்தியை சொல்ல வேண்டும்'.
சொல்ல ஆரம்பித்தேன். 'நான் இப்போது முஸ்லிம்'.
இதனை கேட்டவுடன் ஒன்றாக கூடிக் கொண்டு அவர்களுக்குள்ளாக ஏதோ கிசுகிசுத்து கொண்டார்கள். சில நொடிகளுக்கு பிறகு, என் மகள்களில் மூத்தவளான அலெக்ஸ், 'நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம். இன்னும் சிறிது நேரத்தில் வருகின்றோம்'.

ஒரு லிஸ்டை தயாரித்துக் கொண்டு திரும்பினார்கள். அலெக்ஸ் ஆரம்பித்தாள், 'இனியும் நீங்கள் மது அருந்துவீர்களா?'
என்னுடைய பதில்: 'இல்லை'.
'இனியும் புகை பிடிப்பீர்களா?'
புகை பிடிப்பது ஹராம் இல்லை (??). எனினும் அது உடம்புக்கு நல்ல தல்ல. அதனால் என்னுடைய பதில், 'இல்லை'.
அவர்களுடைய கடைசிக் கேள்வி என்னை பின்னுக்கு தள்ளியது.

'தற்போது முஸ்லிமாகி விட்டதாக கூறுகின்றீர்கள், இனியும் உடலின் மறைவான பாகங்கள் வெளியே தெரியுமாறு மேலாடை அணிவீர்களா?'
என்ன???????
இப்போது தான் புரிய ஆரம்பித்தது. நான் உடையணியும் விதம் அவர்களை எந்த அளவிற்கு சங்கடத்தில் ஆழ்த்திருக்கின்றது என்று.
'இப்போது நான் முஸ்லிம்' , தொடர்ந்தேன் , 'இனியும் அப்படி உடையணிய மாட்டேன்'.

'நாங்கள் இஸ்லாமை விரும்புகின்றோம்' என்று கூறி ஆரவாரம் செய்து விட்டு விளையாட சென்று விட்டார்கள்.
நானும் சொல்லிக் கொண்டேன், 'நானும் இஸ்லாமை விரும்புகின்றேன்'."
சகோதரி லாரன் போன்றவர்களை தொடர்ந்து நம் சமூகத்திற்கு கொடுத்து, இஸ்லாம் குறித்த தவறான எண்ணங்களை களைய அல்லாஹ் போதுமானவன்.

டோனி பிளேர், தான் குர்ஆனை தினமும்ப டித்துவருவதாகவும், தான் இறை நம்பிக்கையில் நீடிக்க குர்ஆன் உதவுவதாகவும் கூறியுள்ளார். அவர் கூடிய விரைவில் நேர்வழி பெற இறைவன் உதவுவானாக... ஆமீன்.

Please Note:
இந்த பதிவில் உள்ள மொழிபெயர்ப்பு முழுமையானதல்ல. முழுமையாக படிக்க கீழே உள்ள சுட்டிகளை பயன்படுத்தவும்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

Sr. Lauren Brown's Official Website:
1. http://www.laurenbooth.co.uk/

டொனி பிளேயர் அல்குர்ஆனைக் கற்கின்றார்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் தான் தினமும் அல்குர்ஆனைக் கற்றுவருவதாக பிரித்தானியாவின் "The Observer" என்ற சஞ்சிகைக்குக் கொடுத்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உலக நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்காக மாத்திரமல்லாமல் அது ஒரு மகிப் பெரிய வழிகாட்டி நூல் என்ற வகையிலும் நான்அதனைப்படித்து வருகின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிரிட்டனின் தூதுவராகக் கடமையாற்றும் பிளேயர் அப்பகுதி மக்களின் மத நம்பிக்கைகள் தொடர்பாக பலதையும் அறிந்திருப்பது தனது பணிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொனி பிளேயரின் மனைவியின் சகோதரியும் பிரபல ஊடகவியலாளருமான "லோரன்பூத்" கடந்த வருடம் இஸ்லாத்தைத் தழுவியமையும் இங்கு அவசியம் குறிப்பிடத்தக்கதாகும்.

London, June 13, 2011 / Strodong. com

References:
1. Lauren Booth explains why she feel in love with Islam - news.com.au. link
2. Lauren Booth’s Spiritual Journey to Islam - The American Muslim. link

0 comments: