அஸ்ஸலாமு அலைக்கும்.(தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக) அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.
யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா? -அல்குர்ஆன் 19:67

Friday 28 August 2015

‘ரியா’ மறைவான இணைவைப்பு- பாகம் 3

 ஆசிரியர் : அபூ அம்மார் யாசிர் அல் காழி – தமிழில் : M. H.. ஜவாஹிருல்லாஹ்
ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

    'ரியா"வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளை விட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள்.

    மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்; அவர்கள் சொன்னார்கள். 'நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்ட போது, அவர்கள் 'ரியா" என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

மற்றொரு நபிமொழியில் தஜ்ஜாலின் தீங்குகளை விட அதிகமாகத் தனது சமுதாயத்தினரை 'ரியா" பாதிக்குமோ என்று இறைத்தூதர் அஞ்சியிருப்பது வெளிப்படுகின்றது.
    அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர்; வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக் கொள்கிறார்." என்று கூறினார்கள்.ஆதாரம்: இப்னுமாஜா

    இந்த நபிமொழியை நாம் அலசிப் பார்க்கும் போது, 'ரியா"வின் உண்மையான அபாயங்களை உணர முடியும். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட காலம் முதல், இறுதித் தீர்ப்பு நாள் வரை, மனித குலம் அனுபவிக்கும் மிகப் பெரும் சீர்கேடு தஜ்ஜாலினால் ஏற்படுவது தான். நபி நூஹ் (அலை) முதல் அனைத்து இறைத் தூதர்களும் தங்கள் சமுதாயத்தவர்களிடம் இந்தப் பேரபாயம் குறித்து எச்சாித்துள்ளார்கள். தஜ்ஜாலுடைய காலத்தில் வாழும் மக்கள் அவனை விட்டு ஓடிவிட வேண்டுமென்றும், ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பிறகும் அவர்கள் தஜ்ஜாலின் அபாயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டுமென்றும், அண்ணல் நபி அவர்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும், தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட 'ரியா" வினால் ஏற்படும் தீங்குகள் குறித்துத் தான் அதிகமாக அஞ்சுவதாக மேலே குறிப்பிட்ட தனது அமுத மொழியில் நபிகளார்  அவர்கள் கூறியுள்ளார்கள்.

    யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (திருக்குர்ஆன் 50:37)

    'ரியா" மறைவான தன்மையுடையது. எனவே, அதன் அபாயங்கள் மேலும் கடுமையானதாக அமைந்துள்ளன.

    அபூமூஸா அல் அஷ்அரீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி அவர்கள் ஒரு நாள் எங்களுக்குப் பிரசங்கம் செய்தார்கள். அப்போது அவர்கள், 'மனிதர்களே! இந்த இணைவைப்பை (அதாவது ரியாவை)க் குறித்து அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காட்டிலும் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது."ஆதாரம்: ஸஹீஹ் அல் தா;கீப் வல் தா;ஹீப்

    இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
    'நிலவில்லாத ஓாிரவின் நடுவில், கருமை நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பை விடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது."  ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர்

(இன்னொரு சிறிய இணைவைப்பு குறித்து இப்னு அப்பாஸ் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்த போதிலும், ரியா போன்ற சிறிய இணைவைப்பிற்கும் இது பொருந்துவதாக அமைந்துள்ளது.)

ரியாவின் தீங்கிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு இறைத்தூதர்; அவர்கள் கூட அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். இறுதி ஹஜ் பயணத்திற்கு முன்பு அவர்கள் அல்லாஹ்விடம்:-

    'அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக" என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி

    இனி ரியாவின் சில தீங்குகளைக் காண்போம்.
    1. ஈமானையும், தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகின்றது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
    ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்குகாகவே தவிர நான் படைக்கவில்லை. (திருக்குர்ஆன் 51:56)

    'ரியா"வில் ஈடுபடும் ஒரு மனிதன் தான் படைக்கப்பட்டத்தின் நோக்கத்தையே அழித்து விடுகின்றான். ஏனெனில், அல்லாஹ்வை உண்மையாகவே வணங்குவதற்குப் பதிலாக, அல்லாஹ்வை வணங்குவதைப் போல் பாசாங்கு செய்து, அல்லாஹ்வுடைய படைப்புகளின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெறுவதற்கு அவன் விரும்புகிறான்.

    உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
உண்மையான நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்விற்காக மட்டுமே வணக்கத்தில் ஈடுபடுவார்கள். தங்கள் வணக்க வழிபாடுகளுக்காக மற்றவர்களிடமிருந்து அவர்கள் எவ்வித வெகுமதியையோ, நன்றியையோ எதிர்பார்க்க மாட்டார்கள். இதனை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் விளக்கியுள்ளான்:

    அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும் கைதிக்கும் உணவளிப்பார்கள். 'அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை" (எனக் கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 76:8,9)

தொழுகை, நோன்பு போன்ற அத்தியாவசியக் கடமைகள் மட்டுமில்லாமல், தேவையுடைய மக்களுக்கு உதவிடுவதும் வணக்கம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் அடிப்படை வசதிகள் தங்களுக்குத் தேவைப்பட்ட போதும் கூட, அவற்றைத் தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் பாராது, வழங்க உண்மையான நம்பிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பதாக வாக்களித்துள்ள மாபெரும் அருட்கொடைகளுடன், தங்களது உதவிகளைப் பெற்றவர்கள் காட்டும் நன்றி விசுவாசத்தை எவ்வகையிலும் ஒப்பிட முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்து இருக்கின்றார்கள்.

திருப்திப்படுத்துவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அல்லாஹ் ஒருவனே வணங்கப்படுவதற்கும் தகுதியானவன் என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் உணர்ந்தே செயல்படுவார்கள். இதற்கு எதிர்மறையான நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு திருக்குர்ஆனில் விமர்சிக்கின்றான்:

    தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காக தொழுவோர்க்குக் கேடுதான். (அவர்கள்) அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள். (திருக்குர்ஆன் 107:4-7)

    சூரா அந்நிஸாவிலும் அல்லாஹ் நயவஞ்சகர்களைப் பின் வருமாறு வர்ணிக்கின்றான்.
    நயவஞ்சகர்களய் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல்லாஹ்வைக் குறைவாகவோ நினைவு கூர்கின்றனர். (திருக்குர்ஆன் 4:142)

இறை நம்பிக்கை (ஈமான்) மற்றும் ஏகத்துவம் (தவ்ஹீத்) மீதான பிடிப்பை 'ரியா" எவ்வாறெல்லாம் ஆட்டம் காண வைக்கும் என்பதற்கு இந்த திருக்குர்ஆன் வசனங்கள் எச்சாிக்கையாக அமைந்துள்ளன.

    2. இணைவைப்பின் சிறிய வடிவம்!
    அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்: 
'ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தொிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்." ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.

    'ரியா"வுடன் செயல்படும் ஒரு மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்குவதற்கு நாடுவதில்லை. ஆனால், 'எண்ணத்தில் இவைணைப்பை" வைக்கும் மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறொன்றை வணங்க உண்மையில் நாட்டம் கொள்கிறான். உதாரணமாக, சிலையை வழிபடும் முஸ்லிமல்லாத ஒருவர், அந்தச் சிலையிடம் பிரார்த்திக்க வேண்டும், அதற்காக நேர்ச்சை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார். இது எண்ணத்தில் வைக்கப்படும் இணைவைப்பு வகையைச் சார்ந்ததாகும். இதற்குக் காரணம், அந்தச் சிலையினால் தனக்கு நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு இயலும் என்று அவர் நம்புகிறார்.

    ஆனால், மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்ளும் ஒரு முஸ்லிம், அம்மக்களைத் தொழுகின்றார் என்று சொல்லி விட முடியாது. மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவரது நோக்கம். அவர்களை வணங்குவது அவரது நோக்கம் அல்ல. அவரது செயல் மறைமுகமாக அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை வணங்கும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே, 'ரியா"வும், 'எண்ணத்தில் இணைவைப்பும்" சமமானவை அல்ல.

    அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நிச்சயமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகிறவர்களுக்கு மன்னித்து விடுகிறான்.
(திருக்குர்ஆன் 4:48)

    நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நஷ்டமடைந்தவராவீர் என்று உமக்கும், உமக்கு முன் சென்றோர்க்கும் அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன் 39:65)

    இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இணைவைப்புகள் பெரும் இணைவைப்பு வகையைச் சேர்ந்தவையாகும். ஆனால், இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளவை சிறிய வகை இணைவைப்பிற்கு பொருந்துமா? இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும், ரியா இந்த வகையைச் சேர்ந்தது அல்ல. மாறாக, அது பெரும் பாவங்களில் (அல் கபாயிர்) ஒன்றாக விளங்குகின்றது என்று கூறுவது நலமாகும். (அல்லாஹ் நன்கு அறிந்தவன்) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், (அல்லாஹ் அல்லாத மற்றவர்களை வணங்குவது போன்ற) பெரும் இணைவைப்பு ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேற்றி விடுகின்றது: முடிவில்லாத நரகத்தை அவனுக்கு நிச்சயமாக்குகின்றது: அவனது நற்செயல்கள் அனைத்தையும் அழித்து விடுகின்றது. சிறிய வகை இணைவைப்பு, ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை.

    ஆனால், ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயற்களுக்கானக் கூலிகளை அது ரத்து செய்து விடுகின்றது. அம் மனிதனின் நற்செயல்கள் அனைத்தும் சிறிய வகை இணைவைப்பினால் அழிவதில்லை. சிறிய வகை இணைவைப்பு செய்தவருக்கு நரகம் நிச்சயம் உண்டு என்று சொல்ல முடியாது. அல்லாஹ் நாடினால் அவரை மன்னித்து விடலாம்.

    3. வழிகேட்டை அதிகாிக்கும்
    ரியாவில் ஈடுபடும் மனிதனின் உள்ளத்தில் நோய் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயை குணப்படுத்தாவிட்டால், அது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். திருக்குர்ஆனில் வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

    அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(திருக்குர்ஆன் 2:9,10)

    அண்ணல் நபி அவர்களின் தோழர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்தில் நாம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண முடிகிறது.

    ஜாபிர் இப்னு சமூரா அறிவிக்கிறார்கள்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது, கூஃபா நகரவாசிகள் சிலர் தங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்ட சஅது இப்னு அபி வக்காஸ் (ரலி)அவர்களைப் பற்றி புகார் தொிவித்தார்கள். இந்த புகாரைப் பற்றி விசாாிக்க உமர் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இருப்பினும் அவர்கள் தொடந்து உமர் (ரலி) அவர்களிடம் மென்மேலும் புகார்களைக் கூறிய வண்ணம் இருந்தார்கள். சஅத் (ரலி) அவர்களுக்கு சரியாகத் தொழக்கூடத் தொியவில்லை என்றும் கூட அவர்கள் புகார் சொன்னார்கள். இச்சூழலில் உமர் (ரலி) சஅதை அழைத்து அவர்களது தொழுகையைப் பற்றி விசாாித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.

    'அல்லாஹ்வின் மீது ஆணையாக, அண்ணல் நபி அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ அதே முறையில்தான் நான் தொழுதேன். இதில் நான் எந்த வகையிலும் குறை வைக்கவில்லை. இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டியும், பிந்தைய இரண்டு ரக்அத்துகளையும் சுருக்கியும் தொழுவேன்" இப்பதிலைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் 'உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்தது இதனைத் தான்" என்று பதிலளித்தார்கள்.

    இதன் பிறகு மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்துவதற்காக பல தூதா;களை உமர் (ரலி) அவர்கள் கூபாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இத்தூதர்கள் சென்ற ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அவர்கள் மக்களிடம் சஅதைப் பற்றி விசாாித்தார்கள். அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் சஅதைப் பற்றிய பாராட்டுரைகளைத் தான் மக்களிடமிருந்து கேட்க முடிந்தது. அப்ஸ் கோத்திரத்தாாின் பள்ளிவாசலுக்கு தூதர்கள் சென்ற போது உஸாமா இப்னு கத்தாதா என்றமனிதர் எழுந்து நின்று 'உங்களுக்கு உண்மை தொிய வேண்டுமெனில் நான் சொல்வதைக் கேளுங்கள். படைகளுடன் சேர்ந்து சஅத் போர்புரிவதற்குச் செல்வதில்லை. போாில் கிடைத்த பொருட்களையும், அவர் நியாயமாக பகிர்ந்தளிப்பதில்லை" என்று கூறினார். இதனைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள் 'இறைவா! நான் உன்னிடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறேன். உனது இந்த அடியார் (அதாவது உஸாமா) ஒரு பொய்யராக இருந்தால், ரியாவிற்காக, பிரபலமடைவதற்காக எழுந்து நின்றிருப்பாரேயானால், அவரது வாழ்நாளை நீடிப்பாயாக, அவரது வறுமையை அதிகாிப்பாயாக மேலும் அவரது கண்ணியத்தைக் குலைப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

இதற்குப் பல ஆண்டுகள் கழித்து உஸாமாவிடம் அவரது நிலை எப்படியுள்ளது என்று வினவப்பட்டால்....

    'வயது முதிர்ந்த கிழவனாக அலுப்பு தட்டியவனாக சஅதின் பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்" என்று பதிலளிக்கும் நிலையில் இருந்தார். இச்சம்பவத்தை விவாிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறும் போது, 'நான் அவரை (உஸாமாவை) ஒருமுறை பார்த்தேன். வயோதிகத்தின் காரணமாக அவரது புருவங்கள், கண் இமையில் படும் அளவிற்குத் தொங்கியிருந்தது. இருப்பினும் தெருக்களில் இளம் பெண்களைக் கடந்து செல்லும் போது அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நூல்: புகாாி, முஸ்லிம், அபூதாவூத்

    4. நல்லருளைப் பெற்றுத்தரும் செயல்களைப் பாழ்ப்படுத்துகிறது
அல்லாஹ்விற்காக அன்றி மற்றவர்களுக்காக செய்யப்படும் செயல்கள் இறைவன் அங்கீகாிக்க மாட்டான் என்று பல அறிவிப்புகளில் அண்ணல் நபி அவர்கள் கூறியுள்ளார்கள்.

அபூ உமாமா அல் பாஹிலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்.

    'அல்லாஹ்விற்காக என்று தூய எண்ணத்துடன், அவனது திருப்தியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடனும் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு செயலையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்" நூல்: சஹீஹ் அல்ஜாமீ, சுன்னன் நஸயீ

அல்லாஹ்விற்காக தூய நோக்கமின்றி செய்யப்படும் செயலை அல்லாஹ் எப்படி ஏற்றுக் கொள்வான்? அல்லாஹ் இது போன்ற செயல்கள் குறித்து திருக்குர்ஆனில் எச்சாிக்கிறான்:

    நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (திருக்குர்ஆன் 2:264)

    ரியாவில் ஈடுபடுபவர் மண்ணால் மூடப்பட்ட பாறை போன்றவர் ஆவார். மக்கள் அப்பாறையைப் பார்க்கும் போது அது விளைநிலம் போல் தோற்றமளிக்கும். ஆனால் சிறிய மழை பெய்தால் கூட, அது ஒரு பாறை என்பது அம்பலமாகிவிடும். மேலும் ரியாவில் ஈடுபடுவோர் தங்கள் செயலின் பலன்களை அனுபவிக்க இயலாத சூழலும் ஏற்பட்டு விடும்.

    பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் ஒருவருக்கு இருக்கிறது: அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகளும் ஓடுகின்றன. அதில் அனைத்துக் கனிகளும், அவருக்கு உள்ளன: அவருக்குப் பலவீனமான சந்ததிகள் உள்ள நிலையில் அவருக்கு முதுமையும் ஏற்பட்டு விடுகிறது: அப்போது நெருப்புடன் கூடிய புயல் காற்று வீசி அ(த்தோட்டத்)தை எாித்து விடுகிறது. இந்த நிலையை உங்களில் எவரேனும் விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக இவ்வாறே அல்லாஹ் சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறான். (திருக்குர்ஆன் 2:266)

    ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயல்களுக்கு தீயினால் எாிக்கப்படும் நல்ல பசுமையான தோட்டத்தை அல்லாஹ் உவமையாகக் கூறுகிறான். இந்த தோட்டம் எாிக்கப்படும் போது, அதன் உாிமையாளர் கையைப் பிசைந்து கொண்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்பார். இது போன்ற நிலை தான் தனது நற்செயல்களை ரியாவினால் வீணாக்கியவருக்கு ஏற்படும். இறுதி தீர்ப்பு நாளில் ரியாவைக் கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் சிறுமைப்படுத்துவான். தாங்கள் யாரைக் கவருவதற்காக செயல்களைப் புரிந்தார்களோ அவர்களிடமிருந்தே வெகுமதிகளைப் பெறுமாறு அல்லாஹ் கூறுவான்.

    அண்ணல் நபி அவர்கள் கூறியதாக மஹ்மூத் இப்னு லபீத் அறிவிக்கிறார்கள்: (இறுதித்தீர்ப்பு நாளில்) மக்களின் செயல்களைக் கணக்கிடும் போது, (ரியாவைக் கடைப்பிடித்தவர்களிடம்) கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவான், யாாிடம் உங்கள் செயல்களைக் காட்டுவதற்காக செய்தீர்களோ, அவர்களிடம் சொல்லுங்கள். அவர்களிடம் ஏதாவது கூலி உண்டா என்று பாருங்கள். நூல்: சஹீஹ் அல் தா;கீப் வத் தக்ரீப் - எண் : 29

அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் தங்களிடம் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

    அல்லாஹ் கூறினான்: நானே (எத்தேவையுமின்றி) தன்னிறைவு உள்ளவனாக விளங்கும் போது, எனக்குத் துணையாக யாரும் தேவையில்லை. யாரேனும் எனக்கு வேறொருவரை இணை வைக்கும் விதத்தில் ஒரு செயலைச் செய்தால், (எனது உதவியின்றி) அவருடைய இணைவைப்புடன் அவனை நான் விட்டுவிடுகிறேன். நூல்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா

    அல்லாஹ்வின் தூதா; அவர்கள் சொன்னதாக உபை இப்னு காப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    'இந்த மார்க்கத்தின் மூலமாக சிரமமின்மையும், கண்ணியமும், கவுரவமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியும், பூமியிலிருந்து வலிமையும் உண்டு என்று இந்த சமுதாயத்திற்கு நன்மாராயம் கூறுவீராக. எனவே, இந்த உலகத்தை மனதிற்கொண்டு ஒருவர் மறுமைக்குாிய செயலைச் செய்தால், அதன் லனின் எந்த ஒரு பாகத்தையும் அவர் மறுமையில் அடைய மாட்டார். நூல்: சஹீஹ் தா;கீப் வல் தா;ஹீஹ்

    5. அல்லாஹ்விடம் அவமானப்படுதல்
    புகழுக்காகவும், பெருமைக்காகவும் நற்செயகளைப் புரிவோருக்கு இந்த உலகிலேயே அவர்கள் நாடியது கிடைத்து விடும் என்ற போதிலும், இறுதித் தீர்ப்பு நாளில் அவர்கள் முழுமையாக அல்லாஹ்வினால் அவமானப்படுவார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னதாக முஅத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

    'இந்த உலகில் புகழின் ஸ்தானத்தில் இருந்து பகட்டாக அதனைக் காட்டிக் கொண்ட எந்தவொரு மனிதனையும், இறுதித் தீர்ப்பு நாளில் தனது படைப்புகள் அனைத்தின் முன்பும் அம்பலப்படுத்தாமல் அல்லாஹ் விட மாட்டான்" நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

    'தனது செயல்களைப் பற்றி மற்றவர்களிடம் எவர் பகட்டாகக் காட்டிக் கொள்கிறாரோ, அவரை அல்லாஹ் தனது படைப்பினங்கள் முன்பு சிறுமைப்படுத்தி கண்ணியத்தைக் குலைத்து அவனை இகழ்வான்." நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப்

    6. நரக நெருப்பில் நுழைவதற்கான முதன்மையான காரணம்
அல்லாஹ்வின் திருத்தூதர் முஹம்மது நபி அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இறுதித் தீர்ப்பு நாளில், மக்களில் முதல் முதலில் (இறைவழியில் உயிர் துறந்து) ஷஹீதுக்கே தீர்ப்பு வழங்கப்படும். அல்லாஹ்வின் முன்னால் அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒத்துக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம் 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்;கு அந்தமனிதர், 'நான் உனக்காக (வீர) மரணம் அடையும் வரை போராடினேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய்: வீரன் என்று கூறப்படுவதற்காகவே போாிட்டாய். இவ்வாறே (மக்களாலும் உலகில்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை அம்மனிதர்; முகங்கவிழ இழுத்துச் செல்லும்படி ஆணையிடப்படும்.

    பின்னர் (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனைப் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, குர்ஆன் ஓதும் வழக்கமுடைய அறிஞர் அல்லாஹ்வின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அல்லாஹ், தான் அவருக்கு அளித்த அருட்கொடைகளை எல்லாம் சொல்லிக் காட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளை என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர், 'நான் உனக்காக (இஸ்லாமிய) அறிவைக் கற்று, அதனை (பிறருக்கும்) கற்றுக் கொடுத்து, குர்ஆனை உனக்காக ஓதி வந்தேன்" என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய், அறிவாளி என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டுமென்பதற்காகவே இஸ்லாமிய அறிவைக் கற்றாய். குர்ஆனை (நன்றாக) ஓதக்கூடியவர்கள் என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே குர்ஆனை ஓதினாய். அவ்வாறே (மக்களாலும்) பேசப்பட்டு விட்டது" என்று கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும் வரை அம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லும் படி ஆணையிடப்படும்.

அதன் பின்னர் செல்வந்தர்; ஒருவர் அழைக்கப்படுவார். அவருக்கு (உலகில்) அல்லாஹ் தன் அருட்கொடைகளைத் தாராளமாக வழங்கி அனைத்து விதமான செல்வங்களையும் அளித்திருந்தான். அவருக்கு அல்லாஹ் தான் அளித்துள்ள அருட்கொடைகளை நினைவூட்டுவான். அவரும் அருட்கொடைகள் தமக்குக் கிட்டியதாக ஒப்புக் கொள்வார். எல்லாம் வல்ல அல்லாஹ் அவாிடம், 'நான் கொடுத்த அருட்கொடைகளுக்காக என்ன செய்தாய்?" என்று கேட்பான். அதற்கு அந்தமனிதர் 'நீ எந்த வழிகளிலெல்லாம் செலவிடப்பட வேண்டும் என்று விரும்பினாயோ அவ்வழிகளில் எதிலும் நான் செலவு செய்யாமல் விட்டதில்லை." என்று பதிலுரைப்பார். அதற்கு அல்லாஹ் 'நீ பொய் சொல்கிறாய். (இவர் வள்ளல் தனத்துடன்) வாாி வாாி வழங்குபவர், என்று (மக்களால்) பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே நீ அவ்வாறு செய்தாய். அவ்வாறே (உலகில்) சொல்லப்பட்டு விட்டது" எனக்கூறுவான். பின்னர் நரகத்தின் நெருப்பில் விழும்வரை இம்மனிதரை முகங்கவிழ இழுத்துச் செல்லுமாறு ஆணையிடப்படும். நூல்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீபில் இந்த அறிவிப்பின் இறுதியில் பின்வரும் வாசகமும் இடம் பெற்றுள்ளது. பிறகு அண்ணல் நபி அவர்கள் எனது முட்டிகளைத் தட்டி விட்டுச் சொன்னார்கள்:

'அபூஹுரைராவே! அல்லாஹ்வின் படைப்புகளில் இறுதித் தீர்ப்பு நாளில் நரக நெருப்பிற்கு இரையாகப்போகும் முதல் மூன்று நபர்கள் இவர்கள்தான்"

    7. அல்லாஹ்வுக்கு சிரம் பணிய இயலாமை
    மக்கள் தரும் புகழாரங்களை வணங்கியவர்களுக்கு மேலும் அவமானத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்கள் தனக்கு சிரம் பணிய (சுஜ_து) செய்ய முயன்ற போதிலும், அதனை அல்லாஹ் இயலாமல் ஆக்கிவிடுவான். அபூ சையீத் குத்ாி (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு நீண்ட நபிமொழியில், இறுதித் தீர்ப்பு நாளில் இறைநம்பிக்கையாளர்கள் எவ்வாறு அல்லாஹ்வைக் காண்பார்கள் என்பதை அண்ணல் நபி அவர்கள் விளக்கினார்கள். இதன் பிறகு அவர்கள் சொன்னார்கள்.

    'பிறகு அல்லாஹ் தனது கீழ்காலின் முன்புறத்தை வெளிப்படுத்துவான். (உலக வாழ்வின் போது) தனக்கு தூய எண்ணத்துடன் சிரம் பணிய செய்த அனைவரையும் சிரம் பணிய அனுமதிப்பான். இதனால் அவர்கள் யாருமே நின்று கொண்டிருக்க மாட்டார்கள். மற்றவர்களின் அபிமானத்தைப் பெறுவதற்காக சிரம்பணிந்தவனின் முதுகை அல்லாஹ் ஒரே துண்டுக் கட்டையாக ஆக்கிவிடுவான். (இதன் விளைவாக அவனால் குனியவே முடியாது) ஒவ்வொரு முறை அவன் சிரம் பணியும் போது, அவன் முகங்குப்புற கீழே விழுவான்...." நூல்: சஹீஹ் அல் ஜாமி, புகாாி, முஸ்லிம்

    8. சுனத்திற்குச் செல்வதைத் தடை செய்கிறது.
    மனிதர்களிடையே புகழடைவதற்காக நற்செயல்களைப் புரிவது, சுவனத்திற்குள் நுழைவதையும் தடை செய்யும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்...

    'அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெற வேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்பாரேயானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார்." நூல்: அபூதாவூத், இப்னு மாஜா

    இங்கு குறிப்பிட்டுள்ள அறிவு இஸ்லாத்தைப் பற்றியது ஆகும். இந்த அறிவை அல்லாஹ்விற்காக மட்டுமே ஒருவர் பெற வேண்டும் நமது மார்க்கத்தைப் பற்றி நாம் கற்க வேண்டுமென்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு விடுத்துள்ள கட்டளையாகும். அண்ணல் நபி அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...

    'அறிஞர்களுடன் போட்டி போட வேண்டும் என்பதற்காக அறிவைப் பெறாதீர்கள். இதே போல் சாதாரண பாமரனுடன் விவாதம் செய்வதற்காகவும், கூட்டங்களைக் கவருவதற்காகவும், கவர்ச்சியாக்குவதற்காகவும் அறிவைப் பெறாதீர்கள். எவரொருவர் இதனைச் செய்கிறாரோ அவர் நெருப்பிற்காக காத்திருக்கட்டும்." நூல்: சஹீஹ் சுனன் இப்னு மாஜா

    நம் அனைவருக்கும் இது ஒரு கடுமையான எச்சாிக்கையாகும். மக்களைக கவர்வதற்காக நாம் மார்க்கத்தைப் பற்றிய அறிவை தேடக் கூடியவர்களாக ஆகிவிடக் கூடாது. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் ஒரே நோக்கத்திற்காக மட்டும் நாம் அறிவைத் தே வேண்டும்.

    ரியாவைக் கடைப்பிடிக்கும் ஒருவர் நிரந்தரமாக நரக நெருப்பில் கிடத்தப்பட மாட்டார் என்பதில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. ஏனெனில் ரியா ஒரு மனிதரை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை. ஒரு மனிதனின் உள்ளத்தில் சிறிதளவு தவ்ஹீது இருப்பினும், அவர் நரக நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். அல்லாஹ் நாடினால், 'ரியா'"விற்காக ஒருவரை மன்னித்து, எவ்விதத் தண்டனையும் அவருக்கு அளிக்காமல் இருக்கலாம்.

    9. சாபத்திற்குாிய செயல்கள்
    நமது செயல்கள் தூய்மையான எண்ணத்துடன் செய்யப்படும் போது, அல்லாஹ்வின் அருள் நமக்குக் கிடைக்கும். ஆனால், புகழுக்காகவும், பெருமைக்காகவும் நாம் செயற்களைச் செய்யும்போது நமக்கு சாபம் தான் கிடைக்கும்.

அண்ணல் நபி அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்களை மேற்கோள்காட்டி அப்துல்லாஹ் இப்னு ளம்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

'முழு உலகமும் சாபத்திற்குாியது: அல்லாஹ்விற்காக என்று செய்யப்பட்ட செயல்களைத் தவிர மற்றவை அனைத்தும் சாபத்திற்குாியது" நூல்: சஹீஹ் அத்தா;கீப் வத் தா;ஹீப்

    10. முஸ்லிம் சமுதாயம் அழிதல்
    ரியாவின் பல்வேறு வகையான ஆபத்துகளில் ஒன்று, அதன் தீமைகள் அதில் ஈடுபட்டவர்களை மட்டுமின்றி, முழு சமுதாயத்தையும் அது பாதிக்கும். அண்ணல் நபிஅவர்கள் சொன்னார்கள்.
    'பலவீனமான, எளிமையான அதன் உறுப்பினர்களினால் இந்த சமுதாயத்திற்கு (அல்லாஹ்விடமிருந்து) உதவி கிடைக்கின்றது. அவர்கள் பிரார்த்தனைகள், அவர்களது தொழுகைகள் மற்றும் அவர்களது உள்ளத் தூய்மையே இதற்குக் காரணம்." 
நூல்: சஹீஹ் அத் தா;கீப் வத் தா;ஹீப் சஹீஹ் சுனன் அத் திர்மிதீ

    இந்த நபிமொழி மூலம், தனது சமுதாயத்தினர்களுக்கு அண்ணல் நபி அவர்கள், தூய்மையான முஸ்லிம்களால்தான் சமுதாயம் காப்பாற்றப்படுகிறது என்ற செய்தியை அளித்துள்ளார்கள். எனவே, இச்சமுதாயம் தனது தூய்மையான உறுப்பினர்களை இழந்து விட்டால், அல்லாஹ் தனது உதவிகளைத் துண்டித்துவிடுவான். திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

    அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையோ சார்ந்திருக்க வேண்டும். (திருக்குர்ஆன் 3:160)

    முஸ்லிம்களுடன் பத்ாில் போாிட்ட குறைஷிகளைப் பற்றியும் அவர்கள் எதற்காகச் சண்டையிட்டார்கள் என்பது பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் விவாிப்பதையும் நாம் எச்சாிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தமது இல்லங்களிலிருந்து பெருமக்காகவும், மக்களுக்குக் காட்டவும் புறப்பட்டோரைப் போன்றும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களைத்) தடுத்தோரைப் போன்றும் ஆகி விடாதீர்கள்! அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் முழுமையாக அறிபவன். (திருக்குர்ஆன் 8:47)
ரியா” ஏற்படுவதற்கான காரணங்கள்...
இன்ஷா அல்லாஹ்  - அல்லாஹ்  நாடினால்   >>>>>>>>  தொடரும்

0 comments: