நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஒரு சிறு குறிப்பு :
1926 -ல் பிறந்தவர். அலஹாபாத் பல்கலைகத்தில் சட்டம் படித்தவர்.
ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் 1950-ல் வழக்கஞராக பணியை துவக்கினார்.
1969-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக பதவி ஏற்றார்.
1981-ல் ஒரிஸா உயர் நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியானார்
1983-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார்.
25.9.1990. முதல் 24.11.1991 வரை இந்திய உச்ச நீதி மன்றத்தில் (சுப்ரீம் கோர்ட்) தலைமை நீதிபதியாக பதவிவகித்தார்
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
மக்கள் தொகை (பக்கம் 13)
முஸ்லீம்கள் – 13.4 % (2001-ஆம் கணக்கெடுப்பு படி)
முஸ்லீம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)
1. முஸ்லீம்களில் எழுதபடிக்க தெரிந்தவர்கள் – 59.1 %
அதாவது 40.9% முஸ்லீம்களுக்கு எழுதபடிக்க தெரியாது.
2. முஸ்லீம்களில் 5 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்
3. முஸ்லீம்களில் 8-ஆம் வகுப்புவரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
4. 10-ஆம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
5. 12-ஆம் வகுப்புவரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ஆம் வகுப்பு கூட படிக்காதவர்கள்)
6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்
குடி இருப்புகள் : (பக்கம் 23)