சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் இப்றாஹீம் நபியவர்கள் தனது தள்ளாத வயதில் இறைவனால் தனக்கருளப்பட்ட தனது மகனை அறுப்பதாக கனவில் கண்டதை நிறைவேற்ற முனைகிறார்; அவரின் இத்தியாகத்தை ஏற்றுக்கொண்டு அவர் தனது மகனை அறுத்துப்பலியிடுவதற்குப் பதிலாக ஒரு ஆட்டை அறுக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவர்களின் இத்தியாகத்தை நினைத்து இறைவனுக்காக அறுத்துப்பலியிடும் ஒரு வணக்கமே இன்று தியாகத்திருநாளாக உருவெடுத்திருக்கிறது.
இது சம்பந்தமான தகவல்களை அல்குர்ஆனின் 37 ஆவது அத்தியாயத்தின் 100 ஆவது வசனத்திலிருந்து 111 ஆவது வசனம் வரை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான்.
நபியவர்களின் காலத்தில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பலிப்பிராணிகளை வாங்கி கொழுக்க வைத்து பின்னர் பெருநாளன்று அறுத்துப்பலியிடுவார்கள். இது இன்று கிராமங்களில் நடைமுறையிலிருக்கிறது.ஆனால் பெருநகரங்களில் இது சாத்தியமில்லை. எனவே பெருநாளைக்கு ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்பாக பலிப்பிராணிகளை வாங்கி குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு கொடுப்பது மார்க்கத்தில் தடை இல்லை.
நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்க வைத்துவந்தார்கள் என உமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) கூறினார்.
புகாரி
குர்பானி கட்டாயக்கடமையா?
இது சம்பந்தமான தகவல்களை அல்குர்ஆனின் 37 ஆவது அத்தியாயத்தின் 100 ஆவது வசனத்திலிருந்து 111 ஆவது வசனம் வரை அல்லாஹ் கூறிக்காட்டுகிறான்.
நபியவர்களின் காலத்தில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பலிப்பிராணிகளை வாங்கி கொழுக்க வைத்து பின்னர் பெருநாளன்று அறுத்துப்பலியிடுவார்கள். இது இன்று கிராமங்களில் நடைமுறையிலிருக்கிறது.ஆனால் பெருநகரங்களில் இது சாத்தியமில்லை. எனவே பெருநாளைக்கு ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்பாக பலிப்பிராணிகளை வாங்கி குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு கொடுப்பது மார்க்கத்தில் தடை இல்லை.
நாங்கள் மதீனாவில் குர்பானிப் பிராணிகளை (நன்றாகத் தீனிபோட்டு) கொழுக்க வைத்துவந்தோம். முஸ்லிம்கள் அனைவருமே (பொதுவாகக் குர்பானிப் பிராணிகளை) கொழுக்க வைத்துவந்தார்கள் என உமாமா இப்னு ஸஹ்ல்(ரலி) கூறினார்.
புகாரி
குர்பானி கட்டாயக்கடமையா?